குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்துக்கு ரஜினியின் கருத்து என்ன என்று அறிவதில் பலரும் ஆர்வமாக இருந்தனர் இதற்கிடையே வன்முறை வேண்டாம் அதை தவிருங்கள் என்ற ரீதியில் ரஜினி கருத்து சொல்லி இருந்தார்.
இந்த கருத்தை உதயநிதி போன்றவர்கள் விமர்சனம் செய்ய, பதிலுக்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுக்க துவங்கியுள்ளனர் உதாரணமாக இலங்கை போரின் போது திமுக தலைவரும் உதயநிதியின் தாத்தாவுமான கலைஞர் சென்னையில் சில மணி நேரம் இருந்த உண்ணாவிரத புகைப்படத்தை வைத்து வன்முறை வேண்டாம் என்றுதான் தலைவர் சொன்னார் இது போல போராட வேண்டாம் என்று தலைவர் சொல்லவில்லை என காமெடியாக மீம்ஸ் எல்லாம் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.