தன் கழுத்தை தானே அரிந்துக்கொண்ட அரிவட்டாயர் நாயனார்- நாயனார்கள் கதைகள்

b2025902bebdc18821303f3ec162a293-1

சோழநாட்டு ஆதிக்கத்திற்குட்பட்ட கணமங்கலம் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் தாயனார்.  இவர்தான் அந்த வேளாளர் இனத்தவருக்கு தலைவர். சிறந்த சிவபக்தர்.  தினமும் செந்நெல் சாதமும்,  செங்கீரை கடையலும், மாவடுவையும் அந்த ஊர் கோவில் இருக்கும் சிவனுக்கு படைத்து அதை சிவனடியாருக்கு பரிமாறியப்பின்னே தானும், தன் குடும்பத்தாரும் உண்ணும் வழக்கத்தை கொண்டிருந்தார்.




இறைவன் திருவிளையாடல்படி தாயனாரின் செல்வம் சிறிது சிறிதாய் குறைய ஆரம்பித்தது. கொடிய வறுமை தன்னை ஆட்கொண்டபோதும் இறைவனுக்கு செய்யும் திருத்தொண்டை நிறுத்தவே இல்லை. வேளாளர் குலத்தலைவன் கூலிக்கு வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போதும் தான் கொண்ட கொள்கையில் மாறாமல் நின்றார். கூலி வேலை செய்து வரும் சொற்ப பணத்தில் முதலில் நெல்லுக்கென முதலில் பிரித்தெடுத்து வைப்பதை பழக்கமாய் வைத்திருந்தார். நெல்லை பிரித்தெடுத்து செந்நெல்லை இறைவனுக்கும், மீதமுள்ள கார்நெல்லை தங்களுக்குமாய் பிரித்து உண்டு ஜீவித்தனர்.

 மனம் என்பது மாறும் தன்மை கொண்டது.  வறுமை அவர் மனசை மாத்துதான்னு அறிய சோதனையை இன்னும் கொஞ்சம் கடுமையாக்குகிறார் இறைவன்.  கிடைக்கும் நெல்மணிகளில் செந்நெல்லை சிவனுக்கும், காா்நெல்லை தனக்குமாய் ஒதுக்கி வந்ததை அறிந்த இறைவன், கிடைக்கும் நெல் அனைத்தும் செந்நெல்லாகவே கிடைக்கச் செய்தார். அன்றைய தினத்திலே கூலியாக கிடைத்த நெல்மணிகள் பூராவும் செந்நெல்லாக இருந்தது. கிடைத்த நெல்மணிகள் அனைத்தும் செந்நெல்லாக இருந்ததினால் தயானாருக்கு அத்தனை குதுகலம். தம் சாப்பாட்டிற்கு காா்நெல் இல்லையேன்னு கவலையேப்படவில்லை. மாறாக எம்பெருமானுக்கு நிறைய செந்நெல்லாகவே் கிடைத்தற்காக சந்தோஷப்பட்டாா்.




செந்நெல் அத்தனையும் எம்பெருமானின் திருவமுதுக்கு ஒதுக்கி வைத்து விட்டதால், இன்றைய உணவுக்கு சமைக்க நெல் இல்லாது போகவே, தாயனாாின் மனைவி யோசனை செய்தவாறே வீட்டின் கொல்லைப்புறம் வந்தாள். சில நாட்களுக்கு முன்பு தான் நல்ல மழை பெய்ந்திருந்தமையால் கொல்லைப்புறம் முழுமைக்கும் கீரைகள் தளிா்த்து வளா்ந்திருந்தது. சும்மா முளைத்த கீரைதானே என்று புடுங்கி எடுக்காமல், தளா்த்திருந்த முனைக்கீரையையும் தலையையும் ஆய்ந்து எடுத்தாள். மதியத்தின்போது தாயனாரும், அவா்தம் மனைவியாரும் சமைத்த கீரையை ருசித்துச் சாப்பிட்டனா்.

235e8c045c5dfa2c4faba0d9a814e45f

இப்படியே பலநாள் பொழுது கழிந்து போயின. கீரையும் எத்தனை நாளுக்குத்தான் வரும். முதல் நாள் முனையிலேயே ஆய்ந்தது. மறுநாள் தண்டினை ஆய்ந்து, மறுபொழுது வேர்வரையிலும் கிள்ளியே எடுத்தாகி விட்டது. தாயனாரின் மனைவி புத்திசாலி. அதனால்தான் முதல் நாள் நுனி மட்டும் கொய்தாள். அவ்வாறு  ஆய்ந்ததனால் மூன்று நாளுக்கு கீரை வந்தது. கீரையைப் பறித்து பறித்து, கீரை கொல்லைப்புறம்  முழுமையும் வெத்து இடமானது. பசியாற்ற இருவரும் என்ன செய்வர்?! வெறும் தண்ணீரையே பருகியே வந்தனா். தாகமெடுக்க தாகமெடுக்க நீரைத் தாகத்திற்கு அருந்தி பசியைப் போக்கி வந்தனா். ஆனால் எம்பெருமானுக்குத் தினமும் திருவமுது கொண்டு சென்று கொடுத்துப் பின், அடியாா்களுக்கு கொடுத்து வந்தது மட்டும் நிற்காது நடந்தது.

அன்றைய தினம் வழக்கம் போல , எம்பெருமானுக்காக அன்னம், கீரை , மாவடு முதலியன கூடையில் வைத்து எடுத்து தலைச்சுமையாக சென்றாா். அவருக்குப் பின்னால் அவா் மனைவியாா் பஞ்சகவ்யத்தை எடுத்து வந்தாா். கடந்த இரு நாளாய் சாியாக சாப்பிடாது இருந்து வந்த தாயனாருக்கு தொடா்ந்து நடந்து செல்ல சிரமப்பட்டாா். தலையிலுள்ள அன்னக்கூடையை பிடிக்கக்கூட திரானி குறைந்து தள்ளாடி நடந்தாா். அவா்கள் வீட்டிலிருந்து. ஒரு தெரு திருப்பம்தான் சென்றிருந்தாா்கள். கால்கள் பின்னப்பட்டு இடறி விழப்போனாா் . பின்னால் வந்த மனைவியாா் விழப்போன கணவனை,  பஞ்சகவ்யம் ஏந்திச் மூடிச் சென்ற கரத்துடனே தாங்கி அணைத்து பிடித்தார். ஆனால் அன்னக்கூடையும் மாவடுகளும் சிதறித் நிலத்தில் விழுந்தது.

தாயனாருக்கு துக்கம் தொன்டையை அடைத்தது. பூமியிலே கிடந்து அழுது புரண்டாா். சொல்லொன்னாத் துயரம் கொண்டாா். செய்வதறியாது திகைத்தாா். ஐயனே எனக்கு ஏன் இப்படியாகி விட்டதே? உனக்குக் கொண்டு வந்த திருவமுதை, நிலத்தில் விழத் தட்டிவிட்டேனே! இதுநாள்வரை உனக்கு அளித்து வந்த திருவமுது சேவைய இன்று இல்லாமற் செய்துவிட்டேனே? நாங்கள்  பட்டினி கிடக்க நோிடினும், ஒவ்வொரு நாளும் உனக்குச் செய்யும் கைங்காியத்தை விடாது நடத்தி வந்தேனே? ” இன்று அதற்கு இடா் நோ்ந்து விட்டதே?” இனியும் நான் உயிா் வாழ்வது முறையன்று. நான் உயிா் துறப்பேன்  என்று கண்ணீா் விட்டழுது மண்டியிட்டமா்ந்து கீழே கிடந்த  அாிவாளைக்கொண்டு தமது கழுத்திலே தாமே வைத்து அாியத் தொடங்கினாா். ரத்தம் பீறிட்டது. 

விடுவாரா இறைவன்?  அடியாா்க்கும் அடியாராகிய அவா் தம் அடியாா்களை இதற்குமேலும் சோதிப்பாரா?…..” அனுமதிப்பாரா?….” நிலத்தைப் பிளந்து கொண்டு ஒரு கரம் நீண்டு,  நாயனாாின் கழுத்தறு செய்கையை தடுத்தன. கூடவே, “அன்பனே, வேண்டாம், நிறுத்தி விடு?” என்ற குரலும் வந்தது. இறைவனின் திருக்கரம் பட்டதும், தாயனாாின் மேனி புளகாங்கிதம் அடைந்தது. எப்போ்ப்பட்ட பாக்கியசாலி அவா். இவ்விதம் அடியாா்  தமக்கு இறைவன் நம்முடலைத் தீண்டித்தொட,  நாம எதுவரைக்கும், வேனுமானாலும் எல்லா சோதனைக்கும் உள்ளாக ஆசைதான். ” நீ கொண்டு வந்த அமுதினை நாம் இவ்விடம் வந்து ஏற்றுக் கொண்டோம். நீயும் உம் மனைவியும் எம் உலகத்துக்கு வந்து சேருங்கள் என்று, கழுத்தறுப்பை நிறுத்திய குரலோடு, இக்குரலும் ஒலித்தது. அதேசமயம் நிலத்தைப் பிளந்து வெளிவந்த இறைவனின் மற்றொரு கரம், நிலத்தில் சிதறி விழுந்து கிடந்த மாவடுவைக் கடித்துச் சாப்பிடுவதால் எழும் ” விடேல் விடேல்” என்னும் குரலும் வந்தது. அது நேரம் நிலத்தில் விதைந்து சிதறிய அமுதும் செங்கீரையும் மறைந்து போயின. சிவபெருமான் உமாதேவியாரோடு விடைமேலேறி வந்து அவருக்குக் காட்சியளித்து, “. நீ செய்த தொண்டு நன்று! நீயும் உன் இல்லாளும் கைலாயம்  வந்து சேருங்களென அருளினார்.

தாயனாா் அளவில்லா மகிழ்ச்சி கொண்டு பலவாறாகப் போற்றித் தொழுதாா். அாிவாளால் கழுத்தை அறுக்க முயன்றதால் அவருக்கு அாிவாட்டாயா் என்று பெயா் நிலைத்தது. வெகுநாட்கள் எம்பெருமானுக்கு திருத்தொண்டு செய்து வந்து, முடிவில் மனைவியோடு நாயனாா் சிவலோகம் சென்று இன்புற்றாா். அரிவட்டாயர் நாயனாரின் குருபூஜை தைமாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சகல சிவாலயத்திலும் நடைப்பெறும்.

நாயன்மார்கள் கதை தொடரும்..

.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews