அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.. இதனாலதான் இவருக்கு மேஜர் அடைமொழி வந்துச்சா..? – மேஜர் சுந்தர்ராஜன் சினி பயணம்!

மிமிக்ரி கலைஞர்களின் கன்டென்ட் கதாநாயகன்.. நடித்த ஒவ்வொரு படத்திலும் அக்மார்க் நடிப்பு. ஒவ்வொரு வசனமும் உச்சரிக்கும் போது தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் வரும் ஸ்டைல் என ரசிகர்களுக்கு தனது நடிப்பால் புது டிரெண்டை உருவாக்கியவர்தான் மேஜர் சுந்தர்ராஜன். தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலகட்டங்களில் தொலைபேசித் துறையில் பணியாற்றிக் கொண்டே நடிப்பின் மீது மோகம் கொண்டு நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

நாடகத் துறையில் இருந்து 1962 ஆம் ஆண்டு பட்டினத்தார் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த மேஜர் சந்திரகாந்தி என்ற திரைப்படத்தில் பார்வையற்ற மேஜர் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரத்தின் பெயர் மேஜர். அதிலிருந்து இவரது பெயரின் அடைமொழியாக மேஜர் சுந்தரராஜன் அனைவராலும் அழைக்கப்பட்டார்.

ஜீரோ சைஸ் நாயகிகளுக்கு சவால்விட்டு ஜெயித்த கல்பனா.. ‘சின்ன வீடு‘ படத்தை மறக்க முடியுமா?

அனைத்து கதாபாத்திரங்களிலும் தன்னை அர்ப்பணிக்கும் மேஜர் சுந்தரராஜன் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இருக்கும் மிமிக்ரி கலைஞர்களின் லிஸ்டில் இவரது குரலும் கட்டாயம் இருக்கும். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஆழமான இடத்தை பிடித்தவர் இவர்.

ஒரு வசனத்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் இரண்டு முறை உச்சரிப்பார். அதுதான் இவரது ஸ்பெஷல். தமிழ் சினிமாவை ஆண்ட எம்ஜிஆர் மற்றும் சிவாஜிக்கு தந்தையாக அப்பொழுது நடித்துள்ளார். குரலில் ஒரு கம்பீரம், உடலில் ஒரு வீரம், மொழியை கையாளும் விதம், அதனை உச்சரிக்கும் பாங்கு அனைத்திலும் ஆகச் சிறந்த கலைஞராக திகழ்ந்தவர் மேஜர் சுந்தரராஜன். இவர் ஒரு சில மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

‘அன்பே சிவம்‘ படத்தால் ஒருவருடம் வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிய சுந்தர்.சி.. இதான் காரணமா?

இவரும் சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த உயர்ந்த மனிதன் படத்தில் வரும் அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பேனே என்ற பாடல் இன்றும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறது. சிம்மக் குரல் அழகனாக திகழ்ந்த மேஜர் சுந்தரராஜன் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸ் பற்றாளரான இவர் நடிகர் சிவாஜி கணேசன் தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் சிவாஜி கணேசன் ஜனதா தளம் கட்சியில் இணைந்த போது இவரும் தன்னை அந்த கட்சியில் இணைத்து கொண்டார். பின்னர் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்த மேஜர் சுந்தரர்ராஜன் 2003-ல உடல் நலக்குறைவால் காலமானார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews