சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை இந்த 108 துதி சொல்லி வழிபடுங்கள்

வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது. 

1. ஓம் அத்தி முகனே போற்றி1

2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி1

3. ஓம் அம்மையே அப்பா போற்றி 1

4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி1

5. ஓம் அமரர்கள் கோனே போற்றி!

6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி!

7. ஓம் அங்குச பாஸா போற்றி!

8. ஓம் அரு உருவானாய் போற்றி!

9. ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி!

10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி!

11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி!

12. ஓம் அவல்,பொரி,அப்பம் ,அருந்துவோய் போற்றி!

13. ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வாய் போற்றி!

14. ஓம் ஆதி மூலமே போற்றி!

15. ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி!

16. ஓம் ஆரா அமுதா போற்றி!

17. ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி!

18. ஓம் இடையூறு களைவாய் போற்றி!

19. ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி!

20. ஓம் இருவினை அறுப்பாய் போற்றி!

21. ஓம் ஈசனார் மகனே போற்றி!’

22. ஓம் ஈரேழாம் உலகா போற்றி!

23. ஓம் உத்தமக் குணாளா போற்றி!

24. ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி!

25. ஓம் உண்மை நெறியாளா போற்றி!

26. ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி!

27. ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி!

28. ஓம் எங்குமே நிறைவாய் போற்றி!

29. ஓம் என்றுமே திகழ்வாய் போற்றி!

30. ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி!

31. ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி!

32. ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி!

33. ஓம் எண்குண சீலா போற்றி!

34. ஓம் எழு பிறப்பறுப்பாய் போற்றி!

35. ஓம் ஏழைப் பங்காளா போற்றி !

36. ஓம் ஏக நாயகனே போற்றி!

37. ஓம் எழில் மிகு தேவே போற்றி?!

38. ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி!

39. ஓம் ஐங்கர முடையாய் போற்றி!

40. ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி!

41. ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி!

42. ஓம் நாவலர் பணிவாய் போற்றி!

43. ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி!

44. ஓம் முழு முதற் பொருளே போற்றி!

45. ஓம் ஒளி மிகு தேவே போற்றி!

46. ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி!

47. ஓம் கணத்து நாயகனே போற்றி!

48 . ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி!

49. ஓம் கலைஞானக் குருவே போற்றி!

50. ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி!

51. ஓம் கற்பக களிறே போற்றி!

52. ஓம் கண்கண்ட தேவே போற்றி!

53. ஓம் கந்தனை வென்றாய் போற்றி!

54. ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி!

55. ஓம் சங்கத்துத் தமிழே போற்றி!

56. ஓம் சரவணன் தொழுவாய் போற்றி!

57. ஓம் சர்வ லோகேசா போற்றி!

58. ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி!

59. ஓம் சுருதியின் முடிவே போற்றி!

60. ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி!

61. ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி!

62. ஓம் நாதனே ,கீதா போற்றி!

63. ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி !

64. ஓம் தாயினும் நல்லாய் போற்றி!

65. ஓம் தரும குணாளா போற்றி!

66. ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி!

67. ஓம் தூயவர் துணைவா போற்றி!

68. ஓம் துறவிகள் பொருளே போற்றி !

69. ஓம் நித்தனே ,நிமலா போற்றி!

70. ஓம் நீதி சால் துரையே போற்றி!

71. ஒம் நீல மேனியனே போற்றி!

72. ஓம் நிர்மலி வேனியா போற்றி!

73. ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி!

74. ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி !

75. ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி!

76. ஓம் பாவலர் பணிவாய் போற்றி !

77. ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி!

78 . ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி!

79. ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி!

80. ஓம் முத்தியை தருவாய் போற்றி!

81. ஓம் வேழ முகத்தாய் போற்றி!

82. ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி!

83. ஓம் வேள்வியின் முதல்வா போற்றி!

84. ஓம் வேதாந்த விமலா போற்றி!

85. ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி!

86. ஓம் உடல் நலம் தருவாய் போற்றி!

87. ஓம் செல்வம் தருவாய் போற்றி!

88. ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி!

89. ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி!

90. ஓம் சினம் ,காமம் ,தவிர்ப்பாய் போற்றி!

91. ஓம் கல்வியை அருள்வாய் போற்றி!

92. ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி!

93. ஓம் ஒளவியம் அகற்றுவாய் போற்றி /!

94. ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி!

95. ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி!

96. ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி!

97. ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி!

98. ஓம் அமிர்த கணேசா போற்றி!

99. ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி!

100. ஓம் வலம்புரி விநாயகா போற்றி!

101. ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி!

102. ஓம் சித்தி விநாயகா போற்றி!

101. ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி!

104. ஓம் சுந்தர விநாயகா போற்றி!

105. ஓம் சுக போகம் தருவாய் போற்றி !

106. ஓம் அனைத்து ஆனாய் போற்றி!

107. ஓம் ஆபத் சகாயா போற்றி!

108. ஓம் அமிர்த கணேசா போற்றி!!

6be597f0c13c3f5c69e541a20150e5e7

சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. இந்நாளில் விரதமிருந்து வினாயகரை வழிபட்டால் வாழ்வில் சங்கடங்கள் மறைந்து நிம்மதி பிறக்கும்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews