சகலசெல்வமும் பெற – திருப்பாவை பாடலும் விளக்கமும் 27


9a29a420fb1dff366a9dc2df0b215f4a

பாடல்..

கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.”

பொருள்:

பகைவரை வெல்லக்கூடிய வலிமையுடைய கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடிப் புகழ்ந்து உன் அருளை பெற வேண்டியதால் நாங்கள் பெறும் சன்மானங்கள் யாதெனில்,சூடகம்(வளை), தோள்வளைகள்(வங்கி),தோடுகள்,பூவின் வடிவில் இருக்கும் ஆபரணங்கள், காலில் அணியப்படும் ஆபரணங்கள் ஆகியவை. அதோடு மட்டுமல்லாமல் புத்தம் புது ஆடைகள் அணிந்து, முழங்கை வரை நெய் வழியும் அளவிற்கு பால் சோறும் உள்ளம் குளிர உண்டு மகிழ்வோம்.

விளக்கம்:

இறைவனை தொழுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியல்படுத்தி இருக்கு இப்பாடல்

திருப்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews