துருவித் துருவி கேள்வி கேட்ட நிருபர்கள்… கிளறி உளறிக் கொட்டிய சாண்டி!!

மதிய நேரம் பிக் பாஸ் வீட்டில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு பத்திரிக்கைகளைச் சார்ந்த சுபா, சுதிர், மீனாட்சி, அனுபமா, விஜய், சந்திரசேகர், பிரியங்கா, அதிதி ஆகியோர் பங்குபெற்றனர்.

போட்டியாளர்களிடம் ஒவ்வொருவராக கேள்வி கேட்டனர், முதலாவதாக கேள்வி கேட்ட நிருபர் சாண்டியிடம், இதுவரை என்ன கற்றுக்கொண்டீர்கள்? என்று கேள்வி கேட்டனர்.

04164e250bcb3390790d77001c859e71

அப்போது சாண்டி, “ குடும்பத்தோடு இருப்பதனைப் பற்றி உணர்ந்து கொண்டேன். இந்த வீட்டில் அனைத்து உறவுகளும் உள்ளது. அப்பா, அம்மா, சித்தப்பா, அண்ணன் தங்கை என்ற அனைத்து உறவுகளும் இந்த வீட்டில் உள்ளன.

நான் இங்கு வந்த பிறகு என் வீட்டின் அருமையை உணர்ந்து கொண்டேன் என பலமுறை கூறி இருக்கிறேன். இங்கு கலகலப்பாக இருந்ததுபோல் நான் வீட்டில் இருந்தது இல்லை.

இனி நிச்சயம் வீட்டிலும் இருப்பேன் என்று கூறி இதையே கற்றுக் கொண்டதாகக் கூறினார்.

மற்றொரு நிரூபர் சாண்டியின் விளையாட்டு உக்தி குறித்துப் பேச, சாண்டி அவர் பங்குக்கு கிளறி உளறிக் கொட்டினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...