பொழுதுபோக்கு

தனுஷுடன் சுசித்ராவுக்கும் நெருக்கம்?.. அதனால் தான் அப்படி உடைச்சி பேசுகிறாரா?.. கே. ராஜன் கேள்வி!

சமீபத்தில் பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ் பற்றி அவதூறாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது தயாரிப்பளரான கே.ராஜனும் தனுஷ் குறித்து தன் கருத்துகளை யூடியூப் சேனலுக்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

சுசித்ரா பற்றி பேசிய கே. ராஜன்:

ஆர்ஜேவாக தன் வாழ்க்கையை தொடங்கிய சுசித்ரா பாடகியாக, பாடலாசிரியராக, இசையமைப்பாளராக, டப்பிங் ஆர்டிஸ்டாக மற்றும் நடிகையாக தமிழ் திரைதுறையில் வலம் வந்தார். இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி பாடல்களை பாடியுள்ளார்.

மேலும், சுசித்ரா 2016ம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் சுச்சிலீக்ஸ் என பரவபட்ட பல பிரபலங்களின் ஆபாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சினிமாவை விட்டு விலகி இருந்த சுசித்ரா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்றார்.

பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களாக அளித்து வரும் பேட்டிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. அதில், தன் முன்னாள் கணவரான கார்த்திக் குமாரையும் நடிகர் தனுஷையும் கே எனவும், ஐஸ்வர்யாவும் தனுஷும் தனித்தனியாக டேட்டிங் செல்கிறார்கள், விஜய், அஜித், ஷாருகான், கமல் என அனைவரை பற்றியும் பேசினார். பிரச்சனை பெரிதாக வெடித்த நிலையில், திரும்ப இனி எந்த யூடியூப் சேனலுக்கும் பேட்டி கொடுக்க போவதில்லை என வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.

தயாரிபாளர் கே. ராஜன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில் , பாடகி சுசித்ராவை இந்த பேட்டிக்கு முன் வரைக்கும் அவர் யார் என்று தெரியாது ஆனால் இப்போது அனைவராலும் பேசப்படுகிறார். அவர் தன்னை பிரபலமாக்கிக்கொள்ளவே இந்த இண்டர்வியூக்களை அளித்துள்ளார்.
கமல்ஹாசன் அளிக்கும் அனைத்து விருந்திலும் போதை பொருட்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார். அப்படி பார்த்தால் சுசித்ராவும் அனைத்து பார்ட்டிக்கும் போயிருக்காங்களா. பார்டியில் மது இருப்பது வழக்கம் ஆனால் போதை பொருட்கள் இருக்காது.

இவர் அத்தனை பிரபல நடிகர்களை பற்றியும் பேசுகிறார் என்றால் அவர் அனைவரிடமும் பழகியிருக்கிறார். அதுவும் தனுஷுடன் மிக நன்றாக பழகியுள்ளார். தனுஷ் அனைவரிடமும் இனிமையாக பழகுபவர். அவரின் வாழ்க்கை இந்த நிலைக்கு செல்ல அந்த பழக்கமும் ஒரு காரணம். மேலும், சுசித்ரா சொல்வதை வைத்து பார்த்தால் தனுஷ் அந்த விஷயத்தில் வீக்காக தான் இருப்பாரோ என தோன்றுகிறது. இப்படியேல்லாம் அனைவரை பற்றியும் இழிவாக பேசி தான் நினைத்ததை நிறைவேற்றிவிட்டார். இன்று அனைத்து விமர்சகர்களும் சுசித்ரா பற்றி தான் பேசிவருகின்றனர். இதையெல்லாம் கேட்கும் மக்கள் சினிமாவை கேவலமாக தான் நினைப்பார்கள் என கே. ராஜன் பேசியுள்ளார்.

Published by
Sarath

Recent Posts