நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்க வேண்டிய முறைகள்

நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை அலங்கரித்து வைப்பது என்பதாகும்.

     ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலங்களையும்  தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றார்.

5e876eb98b601214d3d2b1875db0d211

                கொலு வைத்து வழிபடுவது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும் என்பது ஐதீகம்.  நவராத்திரி கொலுவில் ஒவ்வொரு ஜீவராசிகளும் பெற்றுள்ள அறிவின்  அடிப்படையில் கீழ்பகுதியில் இருந்து பொம்மைகளை அடுக்க வேண்டும்.

                முதல் படியில் புல், செடி மற்றும் கொடிகளை வைக்க வேண்டும். இரண்டாம் படியில் நத்தை மற்றும் சங்கு போன்ற பொம்மைகளை வைக்க வேண்டும். மூன்றாம் படியில் கரையான் மற்றும் எறும்பு போன்ற பொம்மைகளை  வைக்க  வேண்டும்.

                நான்காம் படியில் நண்டு மற்றும் வண்டு போன்ற பொம்மைகளை வைக்க வேண்டும்.  ஐந்தாம் படியில் விலங்குகள் மற்றும் பறவைகள் போன்ற பொம்மைகளை வைக்க வேண்டும். ஆறாவது படியில் மனிதர்களின்  உருவபொம்மைகளையும் வைக்கலாம்.

                ஏழாம் படியில் சித்தர்கள் மற்றும்  ரிஷிகளின் பொம்மைகளை வைக்க வேண்டும்.  எட்டாம் படியில் தேவர்கள் மற்றும் நவக்கிரக அதிபதிகள்  பொம்மைகளை வைக்க வேண்டும். ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய பொம்மைகளை வைக்க வேண்டும். சரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதி ஆகிய பெண் தெய்வங்களை வைக்க வேண்டும். ஒன்பது படிகள் இயலவில்லை எனில் ஒற்றை படை எண்களில் அமைக்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews