போடு ஆட்டம் போடு பாடலோடு” பாத்திமா பாபு, ரேஷ்மா, மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகியோர் என்ட்ரி கொடுத்தனர். அனைவரும் ஓடிச் சென்று பாசத்தோடு வரவேற்றனர்.
இவர்கள் 4 பேரும், போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர். அடுத்து போட்டோக்களை மாட்டி, அதைப் பற்றி பேசுமாறு பிக் பாஸ் கூறினார்.
ரேஷ்மா, “முகினை எனக்கு பிடிக்கும், ஏன் என்று காரணம் தெரியவில்லை, ஒருவேளை முந்தைய ஜென்மத்தில் என் மகனாக கூட இருக்கலாம்” என்றார். மேலும் அவன் பெரிதளவில் பேசவில்லை என்றாலும், அனைத்து தருணங்களிலும் என் கூட இருந்திருக்கிறான்” என்று கூறியுள்ளார்.
3 வதாக பேச மோகன் வைத்யா, “முகின் என்னுடைய மகன் போன்றவர், அவர் அழும்போது பல தருணங்களில் நான் உள்ளே சென்று அழுது இருக்கிறேன். வெளியே சென்றபின்னரும் அழுது இருக்கிறேன்” என்று கூறினார்.
பாத்திமாவும் ரேஷ்மாவும் முகின் என்னுடைய மகன் என்று விளையாட்டுக்கு சண்டை போட்டுக் கொண்டனர். அப்போது ரேஷ்மா, “இவன் என்னுடைய மகன், உங்கள் மகன் தர்சன்தான்” என்றார்.
வெளியேறிய தர்சனை பாத்திமாபாபு மறந்துவிட்டாரா? என தர்சன் ஆதரவாளர்கள் கேட்டு வருகின்றனர்.