சேரனிடம் மன்னிப்புக் கேட்ட மீராமிதுன்…!!

போடு ஆட்டம் போடு பாடலோடு” பாத்திமா பாபு, ரேஷ்மா, மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகியோர் என்ட்ரி கொடுத்தனர்.  அனைவரும் ஓடிச் சென்று பாசத்தோடு வரவேற்றனர்.

இவர்கள் 4 பேரும், போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர். அடுத்து போட்டோக்களை மாட்டி, அதைப் பற்றி பேசுமாறு பிக் பாஸ் கூறினார்.

c29797ec01c40957eeef36f70ad4c6ce

முதலாவதாக பேசிய பாத்திமா பாபு லாஸ்லியாவின் தந்தை வந்து சென்றதைப் பற்றிப் பேசினார். அது போன்ற ஒரு விஷயத்தை திரைப்படங்களில் கூட அழுத்தமாக சொல்லப்படவில்லை என்று கூறினார்.

அடுத்து பேசிய மீரா சேரனுக்கும் அவருக்கும் நடந்த சம்பவத்தைப் பற்றிப் பேசினார். “என்னால் பிறர் அழுகையை அனுபவிக்க முடியாது, அதனால் நான் இங்கே இருந்தபோது சேரன் சார் அழுத அந்த போட்டோவைப் பற்றிக் கூறுகிறேன். அவரைப் பற்றி நான் கூறிய விதத்தினை மாற்றி இருந்தால், பிரச்சினை இந்த அளவு வந்து இருக்காது.  அவரும் காயப்பட்டிருக்க மாட்டார். முகின் அப்போதே கூறினான்” என்று கூறி வருத்தம் பொங்க பேசினார்.

இந்த சம்பவத்தால் நிச்சயம் சேரன் மனம் நெகிழ்ந்துபோயிருப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...