லட்சுமி கடாட்சம் வீட்டில் தங்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க..


790f8ccb83b2d8f7d6d5b33af47a96e7

என்னதான் பாடுபட்டு உழைத்து சிறுக சிறுக சேமித்தாலும் வீட்டில் செல்வம் நிலைப்பதில்லை. அப்பேற்பட்டவர்கள் கீழ்க்காணும் லட்சுமி தேவி மூல மந்திரத்தினை, தொடர்ந்து 21 வெள்ளிக்கிழமைகளில் லட்சுமிதேவி உருவ படத்துக்குமுன் வாழை இலையை விரித்து ஐந்து வகையான பழங்களையும் அவல், பொரி, கடலை, சக்கரை பொங்கல் வைத்து கற்பூர ஆரட்தி காட்டி, பின்பு அருகில் உள்ள சிறு பெண் குழந்தைகளை அழைத்து வந்து , அவர்களை லட்சுமிதேவியாய் மனதில் நிறுத்தி அவர்களின் பாதத்தை கழுவி பயபக்தியுடன் கீழ்க்காணும் மந்திரத்தை 1008 முறை உரு செய்து,அதன் றகு குழந்தைகளுக்கு அன்னமிட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் மகாலட்சுமி தாண்டவம் ஆடுவாள். கணவனுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் பணம் காசு விருத்தியாகும் எடுத்த காரியம் தடையில்லாமல் நடக்கும் என்பது ஐதீகம்.

1202adc292c2e9409eba8d595c82f942

லட்சுமி கடாட்சத்தினை வீட்டினுள் தங்க வைக்கும் லட்சுமி தேவி மூல மந்திரம்..

ஓம் சொர்ண ரூபிணி வசி வசி
ஓம் ஸ்ரீ லட்சுமி தேவி வசி வசி
ஓம் கமலா தாரணி வசி வசி எனக்கு அருள் தருவாய் தாயே சுவாஹா

இந்த மந்திரத்தினை நம்பிக்கையுடன் சொல்லி, தேவியை வழிபட்டு எல்லா வளமும் பெறுவோம்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews