Karthigai Deepam: திட்டம் போட்டு ரவுடிகளை பிடிக்கும் கார்த்திக்… ஐஸ்வர்யா மீது சந்தேகப்படும் மீனாட்சி…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் அபிராமியை கடத்திய ரவுடிகளை தீபா அடையாளம் காட்டுகிறாள். பின்னர் ஐஸ்வர்யா ரவுடிகளுக்கு தகவல் கூறி அவர்களை கார்த்திக் கண்ணில் படாமல் இருக்குமாறு எச்சரிக்கிறாள். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது.

இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இனிக் காணலாம். மயக்கத்திலிருந்த அபிராமி விழிக்கிறாள். ரவுடிகளிடம் ஏன் என்னை கடத்தி வச்சிருக்கீங்க என் பையன் கார்த்திக்கு மட்டும் தெரிஞ்சா உங்களை சும்மா விடமாட்டான் என்று சொல்கிறாள். அதற்கு ரவுடிகளின் தலைவன் பேசாம இருந்தா உயிரோட இருக்கலாம்னு சொல்லி மிரட்டுகிறான்.

மறுபுறம் இன்ஸ்பெக்டர் சரவணன் தீபா அடையாளம் காட்டிய ரவுடி ஒருவரின் வீட்டிற்கு கார்த்தியை அழைத்துச் செல்கிறார். அங்கு ரவுடியின் மனைவியை சந்தித்து பேசுகின்றனர். அந்த பெண்மணி எனக்கு தெரியாது என் கணவரைப் பாத்து ரொம்ப நாள் ஆச்சு என்று சொல்கிறாள். கார்த்திக் அந்த பெண்மணியிடம் என் அம்மாவை காப்பாத்தணும் உங்க புருஷன் தான் கடத்தினவர் கூட இருக்கார், கொஞ்சம் உதவி பண்ணுங்க அப்டினு கெஞ்சி கேட்கிறான். அதற்கு அந்த பெண்மணி என் புருஷனை எதுவும் செய்யாம விட்டுருவீங்க அப்டினா நான் உதவி பண்றேன்னு சொல்கிறாள், கார்த்திக் அதற்கு ஒத்துக்கொள்கிறான்.

இங்கு தீபா, மீனாட்சி, மைதிலி வீட்டில் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது மீனாட்சி அத்தையை கடத்தினது கண்டிப்பா ஐஸ்வர்யா , ராஜேஸ்வரி பிளான் ஆக தான் இருக்கும் என்று சொல்கிறாள். அதற்கு தீபா அவங்க அத்தையை கடத்த வேண்டிய அவசியம் என்ன, அப்படியெல்லாம் இருக்காது என்று சொல்கிறாள். பதிலுக்கு மீனாட்சி ஏற்கனவே ஐஸ்வர்யா சொத்தை பிரிக்கணும்னு பிரச்னை பண்ணினா, இப்போ ஆனந்த் சொத்தைக் கேட்டதும் ரியாவையும் சேர்த்துக்கிட்டு அவ தான் இந்த வேலையை பண்ணியிருப்பா என்று கூறுகிறாள். மைதிலியும் எனக்கும் அப்படிதான் தோணுது என்று சொல்கிறாள்.

அங்கே கார்த்திக்கும் இன்ஸ்பெக்டர் சரவணனும் அந்த ரவுடியின் மனைவி போனை வாங்கி வேறொரு பெண்ணை வைத்து உங்க மனைவிக்கு வலி வந்துடுச்சு ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம் நீ வந்து கையெழுத்து போட்டா தான் ஆபரேஷன் பண்ணுவாங்க என்று கூறி அவனை வர சொல்கின்றனர். அதே மாதிரி அந்த பெண்மணியை ஹாஸ்பிடல் கூட்டிச் சென்று எல்லா ஏற்பாடும் செய்துவிட்டு ரவுடிகாக கார்த்திக்கும் மஃப்டியில் போலீசாரும் காத்திருக்கின்றனர். அவன் வந்ததும் பிடித்து விசாரித்து அபிராமி இருக்கும் இடத்தை அவன் வாயால் சொல்ல வைத்துவிடுகின்றனர். இதோடு இன்றைய எபிசோட் முடிந்தது. மேலும் காண ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத்தவாறாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...