Karthigai Deepam: அபிராமியை தீவிரமாய் தேடும் கார்த்திக். ரவுடிகளை அடையாளம் காட்டும் தீபா…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் தீபா, மீனாட்சி, மைதிலி அபிராமியை கடத்திச் செல்வதைப் பார்த்து தடுக்கின்றனர். ரவுடிகள் இவர்களைத் தள்ளி விட்டுவிட்டு அபிராமியை கடத்திச் சென்றுவிடுகின்றனர். பின்னர் அங்கு வந்த கார்த்தியிடம் தீபா நடந்தவற்றைக் கூறி கடத்திச் சென்ற ஆம்னி காரின் நம்பரையும் கூறுகிறாள். பின்னர் கார்த்தியும் அவரது நண்பரான இன்ஸ்பெக்டர் சரவணனும் அபிராமியை தேடுகின்றனர். அபிராமியை மறைந்து வைத்திருந்த கோடவுனில் தேடுகின்றனர். அதை அபிராமி பார்த்துவிடுகிறார். வாய், கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. அதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது.

இன்றைய எபிசோடில் கார்த்தியும் இன்ஸ்பெக்டர் சரவணனும் கோடவுனில் இருந்து வெளியே வந்துவிடுகின்றனர். அபிராமி அவர்களைப் பார்த்து அழுகிறாள். பின்னர் சரவணன் அம்மாவை உங்கள் பிசினஸ் எதிரிகள் கடத்திருப்பார்களா இல்லை உங்கள் வீட்டில் ஏற்கனவே பிரச்சனை பண்ணின ராஜேஸ்வரி அம்மா இதுல சம்பந்த பட்டிருப்பங்களானு கேட்கிறார்.

அதற்கு கார்த்தி வீட்ல இருக்கிறவங்கள எந்த ஆதாரமும் இல்லாமல் சொல்ல முடியாது. அப்புறம் பிசினஸ் எதிரிகள் என்னைத்தான் டார்கெட் பண்ணுவாங்களே தவிர அம்மாவை பண்ணமாட்டாங்க என்று சொல்லிவிட்டு மீனாட்சிக்கு போன் செய்கிறான். ரவுடிகள் தள்ளிவிட்டதில் தீபாவிற்கு அடிபட்டிருந்தது. அதைப் பற்றி விசாரிக்கிறான். மீனாட்சி சின்ன அடிதான் பிரச்சனை இல்லை என்று சொல்கிறாள்.

பின்னர் சரவணன் தீபாவால் ரவுடிகளை அடையாளம் காட்ட முடியுமான்னு கேளுங்க என்று சொல்கிறாள். கார்த்தியும் கேட்கிறான், தீபா முடியும் என்று சொல்கிறாள். உடனே சரவணன் கார்த்தியிடம் நீங்க வீட்டுக்குப் போங்க நான் கிரிமினல்ஸ் லிஸ்ட் எடுத்துட்டு வீட்டுக்கு வரேன் என்று சொல்லி அனுப்புகிறார்.

வீட்டிற்கு ஏற்கனவே வந்துவிட்ட தீபா விஷயத்தை அருணாச்சலத்திடம் கூறுகிறாள். அருணாச்சலம் ஆனந்தை திட்டுகிறார், உன்னால் தான் இந்த பிரச்சனை எல்லாம், நீ ரியாவை கல்யாணம் செய்துட்டு வரலைனா இப்படி நடக்குமா என்று கேட்கிறார். அதற்கு ஆனந்த் என்னை குறை சொல்லாதீங்க இதெல்லாம் சொத்தைப் பிரிக்கக் கூடாதுனு கார்த்தி பிளான் பண்ணி பண்ணிட்டு இருக்கானு சொல்கிறான். அதற்கு அருண் மனசாட்சி இல்லாம இப்படி பேசாத ஆனந்த் என்று சொல்கிறான்.

அதற்குள் கார்த்தி வந்துவிடுகிறான். தீபாவிடம் இன்ஸ்பெக்டர் சரவணன் வருவார் ரவுடிகளை அடையாளம் சொல்லுங்கன்னு சொல்கிறான். சரவணனும் வருகிறார். தீபா இரண்டு ரவுடிகளை அடையாளம் காட்டுகிறாள். பின்னர் கார்த்தியும் சரவணனும் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக செல்கின்றனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ரவுடிகளுக்கு போன் செய்து இரண்டு நாள் பத்திரமா அத்தைய வச்சுக்கோங்க அதுக்கு அப்புறம் அவங்க கதையை முடிச்சிடுங்க என்று சொல்கிறாள். அதோடு இன்றைய எபிசோட் முடிகிறது. மேலும் காண ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...