Hat trick வெற்றி!! ஜிம்பாவே அணியை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா!!

இந்திய கிரிக்கெட் அணியின் நிலைமை பற்றிய பலரும் குறை கூறிய நிலையில் அடுத்தடுத்த தொடர்களில் இந்தியா தனது நிலையை நிரூபித்துக் கொண்டு வருகிறது. ஏனென்றால் சவுத் ஆப்பிரிக்காவின் தொடருக்கு பின்பு இந்தியா மேற்கொண்டு அனைத்து நாடுகளுடன் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்திய அணி ஜிம்பாவே அணியோடு பலப்பரீட்சை மேற்கொண்டு வருகிறது. இதில் மூன்று 50 ஓவர் கொண்ட தொடர் காணப்படுகிறது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.

இதனால் தொடர் ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் இன்றைய தினம் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் ஆறுதல் வெற்றியாவது சொந்த மண்ணில் ஜிம்பாவே பெறுமா என்று எதிர்பார்க்கப்பட்ட போது மூன்றாவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜிம்பாவே அணியை ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி.

மைதானத்தில் டாஸ்மென்று முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் மட்டுமே எடுத்தது. 290 வருடங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆடிய ஜிம்பாவே 49.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெறும் 276 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கில் 13 ரன்கள் எடுத்தார்.மேலும் கிசன் 50 ரன்கள், தவான் 40 ரன்கள் எடுத்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...