இக்கட்டான இந்த காலக்கட்டத்தில் சொல்லவேண்டிய மந்திரம் இதுதான்!!


8f1264a64a477c6c0f1a310730b2dc90

பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்தார்.  தம்பிகளை இழந்தார். அதோடு தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து இழந்தார். அவைக்கு பாஞ்சாலியை இழுத்துவர  துச்சாதனனுக்கு ஆணையிட, அவன் அவ்வாறே இழுத்து வந்தான். அவளை மானப்பங்கப்படுத்த துச்சாதனனுக்கு ஆணையிட,  மானம் காக்க பாஞ்சாலி கதறினாள். பீஷ்மர் போன்ற மகாத்மாக்கள் கூட அவளுக்கு உதவ முன் வரவில்லை. இந்த நிலையில் தெய்வமே துணை என கிருஷ்ணனை நினைத்து….

சங்கு சக்ர கதாபாணி ஸ்ரீமத் துவாராக நிலய அச்சுதா!

ஹே கோவிந்த! சரணாகதம்

என மனமுருகி வேண்டினாள். 

பாஞ்சாலி அழைத்த சமயத்தில், துவாரகையில் ஸ்ரீகிருஷ்ணர் தன் தேவியரான ருக்மணி, சத்யபாமாவுடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார். பாஞ்சாலியின் கூக்குரல் அவரது காதில் கேட்டது. ஒருகணம் தாமதித்தால் கூட அந்த அபலைப் பெண்ணின் மானம் பறிபோகும் என்பதால் ஊஞ்சலில் இருந்தபடியே கையை உயர்த்தி அட்சய என்றார். அவரது கையிலிருந்து புறப்பட்ட ஆடை, பாஞ்சாலியின் உடலைச் சுற்றியது.

நாமும் இப்பொழுது கொரோனா வைரஸ் தாக்குதலால் நாளை என்ன நடக்கும், நோய்  நமக்கு தொற்றுமா என பயந்து வாழ்கின்றோம்ம். ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் வேளையில் மனிதர்கள் மட்டுமல்லாமல் தொழில்களும் முடங்கி பொருளாதாரமும் முடங்கி போய் இருக்கும் இந்த சூழலில் நாமும் பாஞ்சாலி சொன்ன மந்திரத்தினை சொல்லி இக்கட்டான சூழலிலிருந்து மீள்வோம்!!

சங்கு சக்ர கதாபாணி ஸ்ரீமத் துவாராக நிலய அச்சுதா!

ஹே கோவிந்த! சரணாகதம்

நம்புவோம்!! நல்லதே நடக்கும்!!

துச்சாதனன் பாஞ்சாலி சேலையை இழுக்க, இழுக்க அது கிருஷ்ணரின் அட்சய என்ற உத்தரவால் வளர்ந்து வந்து கொண்டே இருந்தது. இதனால் துச்சாதனன் கை சோர்ந்து மயங்கி விட்டான். இப்படியாக கிருஷ்ண பகவான் பாஞ்சாலியின் மானம் காத்த தினம் அட்சய திரிதியை எனக்கொண்டாடப்படுகிறது. இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்கள் பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி கிருஷ்ணரின் அனுக்கிரகம் பெறலாம்.

 

 

 

 
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews