சமூகம் சொல்வதனை காதில் போட்டுக் கொள்ள மாட்டேன் – லாஸ்லியா!!

மதிய நேரம் பிக் பாஸ் வீட்டில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு பத்திரிக்கைகளைச் சார்ந்த சுபா, சுதிர், மீனாட்சி, அனுபமா, விஜய், சந்திரசேகர், பிரியங்கா, அதிதி ஆகியோர் பங்குபெற்றனர்.

போட்டியாளர்களிடம் ஒவ்வொருவராக கேள்வி கேட்டனர், சாண்டி, முகின், ஷெரின் என அனைவரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டாலும்   லாஸ்லியாவிடம் அதிக அளவில் கேள்விகள் கேட்கப்பட்டது.

16106cc645931fff93b2dcc1e092bb4c-1

அதுவும் அவரது தந்தை மரியநேசன் வந்து சென்றது குறித்த கேள்விகளே கேட்கப்பட்டன. ஒரு நிரூபர் கேட்டப்போது, “என் வீட்டின் முத்த மகளாக நான் என் கடமையை சரியாக செய்திருக்கிறேன், என்னைக் கேட்டே என் வீட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பர்.

ஆதலால் நான் சொல்லும் முடிவே அவர்கள் எடுப்பர். அவர்கள் அப்படி நடந்து கொண்டமைக்கு காரணம் நாங்கள் வாழும் சமூகமே ஆகும், நாங்கள் கஷ்டப்பட்டபோது அந்த சமூகம் எங்களுக்கு உதவவில்லை. சமூகம் சொல்வதனை நான் காதில் போட்டுக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.

என் அப்பா, அம்மா, நான் என நாங்கள் மூவருமே எங்களுக்கான ஆதரவாக இருந்துள்ளோம் என்று கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...