பிக் பாஸ் வீட்டிற்குள் கவின் மற்றும் தர்சன்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய உள்ளது, நாளை யார் ஜெயிப்பார்கள் என்பதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர். 100 நாட்களைக் கடந்ததும்போதும், ஒவ்வொரு நாளும் யாராவது வந்துசென்ற வண்ணமே உள்ளனர்.

ஆனால் அனைவரும் கேட்கும் கேள்வி, கவின் மற்றும் தர்சன் எப்போது வருவார்கள் என்பதுதான்.

09e9c645a6cf6d08a81d34d49db5220c

காலையில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா ஆகியோர் சிறப்பு விருந்தினராக மீண்டும் என்ட்ரி கொடுத்தனர்.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்ததைப்போல், என் ப்ரண்டைப் போல் யாரு மச்சா? என்ற பாடலோடு பிக் பாஸ் வீட்டிற்குள் காலடி எடுத்துவைத்தனர் கவின் மற்றும் தர்ஷன் ஆகியோர்.

சாண்டி கவினை தூக்கிக்கொண்டு சுற்றிவர், தர்சனை முகின் தூக்கிக்கொண்டு ஓடினர். அடுத்து முகினை தூக்கிக் கொண்டு சுற்றினார் தர்ஷன்.

தர்சனை உள்ளே அழைத்துவந்த சாண்டி சிக்கனை ஊட்டிவிட்டினார், அடுத்து தர்சனும் ஊட்டினார். எப்படியோ பார்வையாளர்களின் விருப்பத்தினை பிக் பாஸ் பூர்த்தி செய்துவிட்டார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews