ரஜினிக்காக இசையமைத்ததற்கு அழுதேன் -அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க , ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும் திரைப்படம் தர்பார்.

5b6656304cde24ee732c7cb450ef8210

இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகின. நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்நிலையில் பேட்ட படத்துக்கு பிறகு ரஜினிக்கு இசையமைத்ததற்கு அனிருத் கண்கலங்கியுள்ளார்.

எனக்கு பிடித்தவருக்கு தொடர்ந்து இசை அமைத்தது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

தர்பார் விழாவில் பேசிய அவர், உலகிலேயே  தனக்கு பிடித்தமான ஒரு நபருக்காக இசையமைத்துள்ளதை நினைத்து  அழுததாக  குறிப்பிட்டார். திரைத்துறைக்குள் வந்து 8 ஆண்டுகளான நிலையில் அதுபோல தான் அழுததில்லை என்றும் அனிருத் தெரிவித்தார்.

அனிருத் ரஜினியின் உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...