மறைந்தும் மறையாத காமெடி நடிகர் பசி நாராயணன்

தமிழ் சினிமாவில் 80, 90களில் பிரபலமாக இருந்த காமெடி நடிகர் பசி நாராயணன் பிரபல இயக்குனர் துரை இயக்கி பெரும் வெற்றி பெற்ற பசி படம் மூலம் அறிமுகமானவர் நாராயணன் பசி படம் முதல் படமானதால் பசி நாராயணன் என்ற பெயர் இவருக்கு அடையாளப்படுத்தப்பட்டது.

9779e01f51b8c20ea0bfdebceaa35be2

தமிழ் சினிமாவில் கவுண்டமணி,செந்தில்,ஜனகராஜ்,சார்லி,வடிவேல் போன்ற அந்நாளைய காமெடி நடிகர்களுடன் சேர்ந்து காமெடி வெயிட்டான காமெடிகள் பல செய்துள்ளார் இவர்.

கவுண்டமணியுடன் இணைந்து காமெடி செய்த சூரியன் படத்தின் காமெடியான ஃபோன் வயர் பிஞ்சி மூணு நாளாச்சி என்ற காமெடி உலக பிரசித்தம். இந்த படத்தில் ஒரிஜினல் பெயருடனே வருவார் கவுண்டமணி வார்த்தைக்கு வார்த்தை நாராயணா நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா எங்க போனாலும் வருது மருந்த அடிச்சு கொல்லுங்கடா என இவரிடம் டயலாக் பேசுவார்.

ராமராஜன் கதாநாயகனாக நடித்து கவுண்டமணி நடித்த பாட்டுக்கு நான் அடிமை என்ற படத்தில் கவுண்டமணியின் மளிகை கடையில் வேலை செய்யும் நபராக வருவார் அதில் ஒரு தேங்காய் உடைக்கும் காட்சியில் கவுண்டர் தேங்காய் உடைத்துவிட்டு அவரே எடுத்துக்கொள்வார் அதற்க்கு காரணம் பசி நாராயணன் கேட்பார் கவுண்டமணி உடனே இதென்ன கண்ட கிபி 1310ல் எங்க குடும்பத்துல ஒரு கல்யாணம் நடந்தது அதுல ஒரு தேங்காய உடைச்சு ஊருக்கே சட்னி அரைச்சிருக்கோம் என்பார் உடனே நக்கலாக வெளங்கும் அப்டீனு சொல்வார் எதைடா சொல்றனு கவுண்டர் கேட்பார் உங்க குடும்பம் அப்டீனு நக்கலாக பதில் சொல்வார் கவுண்டர் உடனே அப்டி சொல்றா பல்லா என நக்கல் விடுவார்.பாண்டியராஜன் நடித்த மனைவி ரெடி.ஆண்பாவம் படங்களில் நல்ல காமெடி செய்து இருப்பார்.மனைவி ரெடி படத்தில் தமிழ் வாத்தியாராக பாடம் நடத்துகிறேன் என்று இன்று இலவ் பற்றி நடத்தப்போகிறேன் என்று அன்புக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என கேட்டு பாண்டியராஜனிடம் அசிங்கப்படுவார்.ஆண் பாவம் படத்தில் லட்டுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு துணிக்கடையில் துணி எடுத்துவிட்டு ஜனகராஜையும்,ஹாஜா செரீப்பையும் ஒரே நேரத்தில் ஏமாற்றுவார்.இவர் நடித்த கடைசி திரைப்படம் 1998ல் வெளிவந்த நினைத்தேன் வந்தாய் அதோடு இவர் மரணம் அடைந்தார். கடைசி படமான நினைத்தேன் வந்தாய் படத்தில் காபி சாப்டிங்களான்னா? டிபன் சாப்டிங்களான்னா என கடைசி கல்யாண காட்சியில் சார்லி விஜயுடன் சேர்ந்து காமெடி செய்வார்.

இவரின் நல்ல காமெடிக்கு ஒரு உதாரணம் கன்னி ராசி படத்தில் இடம்பெற்ற அதில் ஒரு காமெடி சீன்: ரேவதிக்கு செவ்வாய் தோஷம் என்ற விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் ஜனகராஜ் அவர் மேல் உள்ள காதலால் தன் பெயரில் ஒரு போலி செவ்வாய் தோஷம் ஜாதகம் எழுதிக் கொடுக்க ஜோசியரைத் தேடுவார். அப்போது பசி நாராயணன் ஜோசியராக ஒரு வீட்டின் முன் திண்ணையில் அமர்ந்திருப்பார். ஜனகராஜ் அவரிடம் ஜாதகம் எழுதிக் கொடுக்கக் கூறும் முன் அவரது திறமையை பரிசோதிப்பார்: ஜனகராஜ்: ஆமாம்! எவ்வளவு வாங்குறீங்க. பசி நாராயணன்: 100. உடனே ஜனகராஜ் 100ஆ? என்பார் உடனே பசி நாராயணன் என் திறமைக்கு ஊர் வாங்கச்சொல்றது 100, ஆனா நான் வாங்குவேனா ஒரு 50 என்பார். ஜனகராஜ் உடனே 50ஆ? என்பார். அது மக்கள் எனக்கு கொடுக்க விருப்பப்படறது ஆனா நான் தொட மாட்டேனே ஒரு 25 என்று கடைசியில் 5 ரூபாய் கொடுங்க என்று கெஞ்சும் நிலைமைக்கு இறங்கி வருவார். இந்த படத்தின் பிரபலமான காமெடி இது.

விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய் திரைப்படமே இவரது கடைசி படம். அதில் காபி சாப்டிங்களான்னா டிஃபன் சாப்டிங்களான்னா என காமெடி செய்து கலக்கி இருப்பார் இவர்.

இவரது மறைவுக்கு பிறகு இவரது குடும்பம் வறுமையில் வாடுகிறதென்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவரது குடும்பத்துக்கு உதவிகள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...