சின்னத்தாயி, சூரி, கண்ணேதிரே தோன்றினாள், புதுக்குடித்தனம், கிழக்கு சீமையிலே, ஆச்சார்யா,முத்துகுளிக்க வாரிகளா என பலவிதமான படங்களில் 90களில் கலக்கியவர் விக்னேஷ்.
தற்போது அதிகம் படங்களில் நடிக்காவிட்டாலும் சென்னை ஈக்காட்டுதாங்கலில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரும் சினிமாவில் வருவதற்கு முன் ஹோட்டலில் கஷ்டப்பட்டு வேலை எல்லாம் பார்த்திருக்கிறார்.
இந்த நிலையில் கொரோனா லாக் டவுனால் சிரமப்படும் சினிமாவில் இருக்கும் தொழிலார்கள், மற்றும் தினக்கூலிகளுக்கு தனது பிரியாணி கடையை திறந்து இருக்கிறார் நடிகர் விக்னேஷ். இவர் சென்னை ஈக்காட்டுதாங்களில் சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது சினிமா துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு இந்த ஊரடங்கு சமயத்தில் இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.