அபூர்வ சகோதரர்கள் வந்த சமயத்தில் ரஜினி ரசிகர்கள் செய்த வேலை

அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் கடந்த 1989ம் ஆண்டு வெளிவந்தது. ஏப்ரல் 14ல் புத்தாண்டு ரிலீஸ் ஆக இப்படம் வந்தது. நேற்று முன் தினத்துடன் இப்படம் வந்து 31 வருடங்கள் ஆகிறது.

0612d60fb88b20439871cfc2ce27053e-1

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்கள் முட்டல் மோதல் போக்கை கடைபிடித்து வந்தனர், பிறகு ரஜினி,கமல் ரசிகர்கள் மோதிக்கொள்ளும் போக்கை கடைபிடித்தனர். இப்போதும் அஜீத், விஜய் ரசிகர்கள் அத்தகைய மனநிலையில் உள்ளனர்.

அபூர்வ சகோதரர்கள் படம் வந்த புதிதில் ரஜினி ரசிகர்கள் சிலர் ,தியேட்டரில் குண்டு இருப்பதாக புரளி கிளப்பி விட்டதாக கமலின் தீவிர ரசிகர் ஒருவர் கூறி இருக்கிறார்.

பாண்டிச்சேரியில் உள்ள பாலாஜி திரையரங்கில் வெடிகுண்டு இருப்பதாக ரஜினி ரசிகர்கள் சிலர் கிளப்பி விட்டதாக இவர் கூறுகிறார்.

இப்படத்தின் வெற்றி மீது பொறாமை கொண்ட நயவஞ்சகர்கள், கோழைகள், அண்ணன் படத்தின் வெற்றியை களங்கப்படுத்த 27.4.1989 அன்று பாண்டிச்சேரியில் உள்ள பாலாஜி திரையரங்கில் வெடிகுண்டு இருந்ததாக அந்த நேரத்தில் கிளப்பி விட்டுள்ளனர் என அதற்கு கண்டன நோட்டீஸ் அடித்தும் வெளியிட்டுள்ளனர். அந்த நோட்டீஸ் கீழே லிங்கில்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...