உதாரணப்பெண், திருவெம்பாவை பாடலும், விளக்கமும் –


01e0157c6c0c63c65e95ed9952411d07

பாடல்

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

பொருள்:

அழகிய மார்பு கச்சையும், ஆபரணங்களும் அணிந்த பெண்களே! நம் தோழி ‘எம்பெருமானே’ என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை நிறுத்தாமல் பேசுவாள். கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும். சிவன் மட்டுமே தனது
தெய்வம் என்ற நிலையில் பித்துப்
பிடித்து நிற்பாள். அவளைப் போலவே நாமும்
சிவனின் தாள் பணிவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து
நீராடுவோம்

விளக்கம்:

சதா சர்வக்காலமும் சிவனை தொழுதபடியும், சிவன் நாமத்தை உச்சரித்தபடியே இருக்கும் பெண்ணை எடுத்துக்காட்டாய் கூறி,  மூத்த சிவபக்தை மற்ற பெண்களை,  சிவனை வணங்க சொல்வதாக பாடல் அமைந்துள்ளது.

திருவெம்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்…. 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews