விநாயகருக்கு பிடித்தமான உணவுகள்!

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பூஜை செய்வதற்கு அவருக்கு பிடித்தமான உணவு வகைகள் படையல் செய்ய வேண்டும்.

 இலையில் நுனி பாகம் வடக்கு முக்காக இருக்க வேண்டும். அந்த இலையின் மேல் பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த அரிசியின் மேல் களிமண்ணில் செய்த விநாயகர் விக்ரகத்தை எழுந்தருள செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் தான் விசேஷம்.

4b4feac5377d95320de981e7a0d55ac7

 விநாயகருக்கு வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எனும் முக்கனிகளும் கரும்பு, எள், கடலை, அப்பம், மோதகம், பொரி உருண்டை போன்றவை விநாயகருக்கு நிவேதித்து கணேச அஷ்டகம் கூறி பூஜை செய்து வழிபட வேண்டும்.

 விநாயகருக்கு புராணங்கள் படித்து ஆரத்தி எடுத்து வழிபட வேண்டும். பின்பு தயிர் சாதம், நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன் பிறகு குளத்திலோ அல்லது கிணற்றிலோ பிள்ளையாரை கரைத்து விடலாம். பின்பு நாம் தனது விரதத்தினை முடித்துவிட்டு படைத்த உணவுகளை உண்ணலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews