கொரோனா பாதிப்பு- திருப்பதியில் தன்வந்திரி யாகம்

கொரோனா பாதிப்பால் அகில உலகமும் அரண்டுள்ளது. முக்கியமாக அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் கடும் பாதிப்படைந்துள்ளன. ஸ்பெயின், ஈரான் போன்ற நாடுகள் அடுத்த கட்ட நிலையில் உள்ளன.

b131f1257c742380aaa749e422d334ca

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க கடும் முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது21 நாள் வீட்டு சிறைவாசம் போல அனைவரின் நலன் கருதி வீட்டுக்குள்ளேயே அனைவரும் முடங்கி உள்ளனர்.

இதற்கிடையே திருப்பதி திருமலையில் கொரோனா வைரஸ் நீங்கி உலக மக்கள் அனைவரும் நலம் பெற தன்வந்திரி யாகம் நடைபெறுகிறது.

உலகத்தை காக்க அமிர்த கலசத்தை கையிலெடுத்து ஆயுர்வேத வைத்தியராக தன்வந்திரியாக அவதாரம் எடுத்த மஹா விஷ்ணுவுக்கு தன்வந்திரி பகவானுக்கு உரிய மகா யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

நாளை காலை இந்த யாகம் முடிவடைய இருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews