இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த இயற்கை வைத்தியம்!

உயர் இரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தானது. இது தான் ஆபத்தான இதய நோய்க்கு வழிவகுக்கிறது. தற்போது உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் ஏராளமானோர் கஷ்டப்படுகின்றனர். இதற்காக பலர் தினமும் மாத்திரைகளையும் எடுத்து வருகிறார்கள். ஆனால் இந்த பிரச்சனைக்கு நாம் நாட்டு வைத்தியங்களின் மூலமே தீர்வு காண முடியும்.

ஒரு பௌலில்1 டீஸ்பூன் இஞ்சி சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து நன்குகலந்து கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வர, உயர் இரத்தஅழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

உயர் இரத்தஅழுத்த பிரச்சனை இருப்பவர்கள் தினமும் சாத்துக்குடி, ஆரஞ்சு, பீச், ப்ளம்ஸ் போன்ற பழங்களைஅடிக்கடி சாப்பிடுவது நல்லது. முக்கியமாக தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால்,அது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கும் தேவையானசத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

முக்கியமாக உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், அன்றாட உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். குறைந்தது 2 லிட்டர் நீரைத் தவறாமல் குடிக்க வேண்டியது அவசியம்.

உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் வெள்ளை சாதத்தை தவிர்த்து, கைக்குத்தல் அரிசி சாதத்தை சாப்பிடுவது நல்லது. இந்த அரிசியில் சோடியம் மற்றும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவு. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் உப்பு இல்லாத டயட்டை மேற்கொள்ளும் போது இந்த கைக்குத்தல் அரிசி சாதத்தை சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கொத்தமல்லி ஜூஸை தினமும் மூன்று வேளை குடித்து வர வேண்டும். இப்படி குறைந்தது 10-12 நாட்கள் ஒருவர் தொடர்ந்து குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் நன்கு குறைந்து இருப்பதைக் காணலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews