சீன் போட்ட லாஸ்லியா… வார்த்தைகளால் விளாசிய நெட்டிசன்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடியவுள்ளது.

17 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்தப் போட்டியானது தற்போது 4 போட்டியாளர்களை மட்டும் கொண்டு, பைனல்ஸை நோக்கி பயணிக்கிறது.

நேற்றைய நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு செல்வது குறித்து ஒவ்வொரு போட்டியாளர்களும் பேசினர். அப்போது பேசிய லாஸ்லியா, “இறுதிப் போட்டிக்கு வருவேன் என்று நினைத்ததே கிடையாது, மக்களால்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது, அவர்களுக்கு நன்றி என்று கூறினார்.

5b390a867e9c84fa425bedbed3578755

வெளியில் சென்றுவிடலாம் என்ற மனநிலையில்தான் இருந்தேன். அனைவரிடமும்  உண்மையாகவே இருக்க விரும்பினேன். ஆனால் அப்படி இருந்தேனா என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.

இதில் என்ன உங்களுக்கு சந்தேகம் நீங்கள் சேரனை ஏமாற்றியது எங்களுக்கு நன்றாக தெரியும், கவின் சேரனை கிண்டல் செய்தபோது எல்லாம் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தவர் தானே?. உண்மை என்ற வார்த்தையை கவின் விஷயத்தில் மட்டுமே பாலோ பண்ணி இருக்கீங்க என்று பலரும் காரசாரமான கமெண்ட்டுகளை வீசி வருகின்றனர்.

இந்த அளவு சீன் போட வேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் மட்டும்தான் உண்மையான நடந்துகொள்பவர் என்ரு எங்களுக்கு தெரியும் என பலரும் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...