நாளை முதல் ஆசியக் கோப்பைத் தொடர்: ‘இந்தியா-பாகிஸ்தான்’ போட்டி எப்போது?

கிரிக்கெட் உலகில் நாம் அனைவரும் அறிந்தது உலகக்கோப்பை போட்டிகள் தான். இந்த உலககோப்பை போட்டியானது 20 ஓவர் மற்றும் 50 ஓவர். டெஸ்ட் ஆகிய 3 போட்டிகளிலும் நடைபெறும்.

இதற்கு அடுத்தபடியாக ஆசிய கோப்பை காணப்படுகிறது. இது ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்கும் போட்டியாகும். இதில் அதிக முறை இந்தியா கோப்பையை பெற்றுள்ளது.

மேலும் கடைசி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய தொடர் நாளைய தினம் தொடங்குகிறதாக தகவல் கிடைத்தது.

அதன்படி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது. நாளை நடைபெற உள்ள முதல் போட்டியில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை மறுநாள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...