எப்போதும் நல்லவையே பேச வேண்டும்

aacab4c83399841d37a29f7ed79e467e

எப்போதும் தவறாக பேசுவது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் நடைமுறை வாழ்க்கையில் எப்போதும் பார்த்து பார்த்து சரியான வார்த்தைகளை பேசுவது கடினம் என்றாலும் கீழ்க்கொடுத்துள்ளபடி முயன்று  பார்த்தால் நலம் வாழ்க்கையில் அனைத்தும் சுகமாகும்.

நமது வீடுகளில் நம்மை சுற்றி எப்போதும் ஒரு தேவதை இருந்து கொண்டே இருக்கிறதாம். நாம் எதைச் சொன்னாலும் அப்படியே ஆகட்டும் என்ற அந்த தேவதை ஆசீர்வதித்துக்கொண்டே இருக்குமாம்

நாம் பேசுவது, சொல்வது, நல்ல வார்தைகளாகவும், மங்கள வாக்காகவும் இருந்தால் அந்த தேவதையும், அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கும். எனவே எல்லாம் நல்லதாகவே அமையுமாம்

ஏதாவது ஒருபொருள் இருக்கிறதா என்று கணவன் கேட்டால் இல்லையே என்று மனைவி சொல்லக்கூடாது. நிறைய இருந்தது. மறுபடியும் வாங்கவேண்டும் என்பது போல் சொன்னால் தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்குமாம். வீட்டில் எந்த பொருளும் எப்போதும் நிறைந்திருக்கும். வீடு எப்போதும் மங்களகரமாகவே இருக்கும். எனவே பேசும்போது நல்ல வார்த்தையாக அனைவரும் பேசுவோம். வாழ்வில் வளம் சேர்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews