Karthigai Deepam: ரவுடிகளிடம் வசமாக சிக்கிக் கொள்ளும் அபிராமி… விஷயம் தெரியாமல் தேடி வரும் குடும்பத்தினர்…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் அபிராமி கோவில் பணிகளை செய்துக் கொண்டிருக்கிறார். தீபா மீனாட்சி மற்றும் மைதிலியைக் கூட்டிக் கொண்டு வேண்டுதல் செய்வதற்காக கோவிலுக்கு செல்கிறாள். மீனாட்சியும் ரியாவும் ரவுடி ஒருவரிடம் அபிராமியை கொலை செய்துவிட்டு அதை தற்கொலையாக மாற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது.

இன்றைய எபிசோடில் இனி என்ன நடக்கிறது என்பதைக் காணலாம். அபிராமி கோவிலில் இருப்பதை பார்த்த துப்புரவு பணி செய்யும் பெண் ஒருவர் அதை ஏற்கனவே அவரை காணவில்லை என்று போட்டிருந்த குரூப்பில் போட்டோ எடுத்து போடுகிறார். அதைப் பார்த்த ராணி அவருக்கு போன் செய்து எந்த இடம் என்று விசாரிக்கிறார்.

பின்னர் உடனே கார்த்திக்கு தகவலை கூற வேண்டும் என்று கார்த்தியின் ஆபிஸிற்கு போன் செய்து கார்த்தியின் போன் நம்பர் வாங்கி போன் செய்கிறார் ராணி. கார்த்தியிடம் அம்மா இருக்கிற இடம் தெரிஞ்சிடுச்சு அவங்க காஞ்சிபுரம் பக்கத்துல இருக்குற கோவில்ல தான் இருக்காங்க என்று கூறுகிறாள்.

கார்த்தியும் ஆமா எங்க அம்மா மனசு சரியில்லை அப்டினா அந்த கோவிலுக்கு போவாங்க, நான் பாத்துக்கிறேன், தகவல் சொன்னதுக்கு நன்றி என்று சொல்கிறான். பின்னர் ஹாலில் இருக்கும் அப்பா, அண்ணனிடம் அம்மா இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சாச்சு நான் போய் அம்மாவை கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டு கிளம்புகிறான். இதைப் கவனித்த ஐஸ்வர்யா ரௌடிகளுக்கு போன் பண்ணி கார்த்தி அங்க வந்திட்டு இருக்கான். அவனுக்கு முன்னாடி நீங்க போய் அபிராமியை கடத்திருங்க என்று சொல்கிறாள். அவர்களும் கிளம்பி விடுகின்றனர்.

இன்னொருபுறம் நல்லபடியாக வேண்டுதலை முடித்து விட்ட தீபா, அத்தை சீக்கிரம் வீட்டுக்கு வரணும் இல்லனா அவங்க இருக்கிற இடத்தையாவது எங்களுக்கு தெரியப்படுத்து அப்டினு வேண்டுகிறாள். மைதிலி வேண்டுதல் நல்லபடியா முடிச்சிட்டல தீபா உன் அத்தை சீக்கிரமா வந்துடுவாங்க கவலைப்படாதன்னு ஆறுதல் கூறுகிறாள். கோவிலுக்கு மீனட்சியின் தோழி வருகிறார். மீனாட்சியிடம் நலம் விசாரிக்கிறார். அப்போது மீனாட்சி 2 நாலா அத்தை வீட்ல இல்ல சொல்லாம எங்கயோ போய்ட்டாங்க என்று கூறுகிறாள். அதற்கு அவரது தோழி என்ன சொல்ற மீனாட்சி நேத்து தான் உன் அத்தைய காஞ்சிபுரம் பக்கத்துல உள்ள கோவில்ல பாத்தேன் என்று சொல்கிறார்.

அதைக் கேட்ட மீனாட்சி, தீபா, மைதிலி சந்தோசப்படுகின்றனர். தீபா கார்த்தியிடம் தகவல் சொல்கிறாள். கார்த்தியும் எனக்கு ஏற்கனவே தகவல் வந்திருச்சு நான் அங்கதான் போய்ட்டு இருக்கேனு சொல்கிறான். தீபாவும் நாமளும் அத்தையை போய் கூட்டிட்டு வருவோம் என்று சொல்லி மீனாட்சியையும் மைதிலியையும் கூட்டிட்டு ஆட்டோவில் கிளம்புகின்றனர். அபிராமி பூசாரியிடம் கேட்டு கோவில் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அங்கு வந்த ரவுடி கும்பல் மீனாட்சியை தேடி அலைகின்றனர். பின்னர் அவரை கண்டுபிடித்து துணியில் மயக்க மருந்து தேய்த்து அபிராமி முகத்தில் வைத்து மூடி அவரை கடத்திச் சென்று விடுகின்றனர். கார்த்தி ஒருபுறமும், தீபா, மீனாட்சி, மைதிலி ஒருபுறமும் கோவிலை அடைந்து அபிராமியை தேடிக் கொண்டிருக்கின்றனர். இதோடு இன்றைய எபிசோட் முடிந்தது. மேலும் காண ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...