செய்திகள்

20 ஆண்டுகளாக எந்த வேலை தராமல் முழு சம்பளம் தந்த கம்பெனி.. பெண் செய்தது தான் ஹைலைட்

பாரிஸ்: 20 ஆண்டுகளாக எந்த வேலை தராமல் முழு சம்பளம் கொடுத்த பிரான்ஸ் நிறுவனத்திற்கு எதிராக சம்பளம் வாங்கிய பெண் வழக்கு போட்டிருக்கிறார். அதற்கு அந்த நிறுவனம் அளித்த பதிலை பார்ப்போம்.

சம்பளமே ஒழுங்காக தராமல் வேலை வாங்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் ஒரு பிரான்ஸ் நிறுவனம் தனது பணியாளஐருக்கு 20 ஆண்டுகளாக எந்த வேலையும் கொடுக்காமல் முழு சம்பளம் தந்திருக்கிறது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாரன்ஸ் வான் என்ற பெண் கடந்த 1993-ம் ஆண்டு ஒரு டெலிகாம் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். அவருக்கு உடலில் பகுதி பக்கவாதம் ஏற்பட்டது வலிப்புநோயும் வந்துள்ளது. இதனால் அந்த நிறுவனம் லாரன்ஸ் வானுக்கு ஏற்ற வேலையை தொடக்க காலத்தில் வழங்கி இருக்கிறது.

ஆனால் கடந்த 2002-ம் ஆண்டு, பிரான்ஸில் உள்ள வேறுபகுதிக்கு பணியிடம் மாற்றம் பெற்று சென்று விட்ட லாரன்ஸ் வானுக்கு 2002ம் ஆண்டு முதல் ஏற்ற வேலையை அந்த நிறுவனம் வழங்கவில்லை. வேலையே செய்யாமல் தொடர்ந்து பல வருடங்களாக முழு சம்பளம் மாதம் மாதம் வாங்கியபடி லாரன்ஸ் வான் வாழ்க்கை கழித்து வந்துள்ளார்.

இதனிடையே லாரன்ஸ் வான் வேலை பார்த்த நிறுவனத்தின் பெயர் கடந்த 2013-ல் ஆரஞ்ச் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறத. புதிதாக பெயர் மாறிய நிலையிலும் லாரன்ஸ்வானுக்கு எந்த பணியும் வழங்கப்படவில்லை.. சும்மாவே 20 வருடங்களுக்கு மேல் லாரன்ஸ் வானுக்கு முழு சம்பளத்தை மாதம் மாதம் ஆரஞ்ச் நிறுவனம் வழங்கி உள்ளது. இதனிடையே தொடர்ந்து சம்பளம் வாங்கிவிட்டு வேலை செய்யாமல் இருப்பதற்கு லாரன்ஸ் வான், வாசன்ஹோவ் கோர்டில் ஆரஞ்ச் நிறுவனத்திற்கு எதிராக வழக்கே போட்டுவிட்டார்.

அதில் லாரன்ஸ் வான், எனக்கு கடந்த 20 ஆண்டுகளாக வேலை கொடுக்காமல் முழுசம்பளத்தையும் வழங்கி உள்ளது ஆரஞ்ச் நிறுவனம், இதன் மூலம் எனக்கு தார்மீக துன்புறுத்தலை வேலை செய்யும் நிறுவனம் தருகிறது. இதனால் தொழில்முறை அனுபவத்தை தான் இழக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது என்று மனுவில் கூறியிருந்தார்..

இந்த குற்றச்சாட்டை மறுத்த ஆரஞ்ச் நிறுவனம், “பெண் பணியாளர் லாரன்ஸ்வானின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு ஏற்ற பணிச் சூழலை உருவாக்குவது குறித்து நாங்கள் பரிசீலித்தோம். ஆனால், அவருடைய மருத்துவ விடுப்பு இந்த செயல் முறையை எங்களுக்கு மிகவும் கடின மாக்கிவிட்டது” என்று விளக்கம் அளித்துள்ளது.

20 ஆண்டுகளாக வேலை தராமல் சம்பளம் கொடுக்கும் நிறுவனத்துக்கு எதிராக பெண் வழக்கு போட்டிருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by
Keerthana

Recent Posts