குமுறிக் குமுறி அழுத சாய் பல்லவி… நடந்தது இதுதான்!!

கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமானதை அடுத்து மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது, இதனால் நடிகர்கள், நடிகைகள் விதவிதமாய் பொழுதினைப் போக்கி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சாய் பல்லவி திரைப்படங்கள் பார்த்தல், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடல், சமைத்தல் என்று பொழுதினைப் போக்கி வருவதாய் சாய் பல்லவி சமீபத்தில் ஒரு வீடியோவில் கூறி இருந்தார்.

அந்த வகையில் தற்போது சாய் பல்லவி குறித்த மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சில்லுக்கருப்பட்டி படத்தை பார்த்ததாகவும், படத்தைப் பார்த்துவிட்டு குமுறி குமுறி அழுததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

27a69291ba7ad3d3d6b684df0f39d9f0

மேலும் இந்தப் படத்தினை இயக்கிய இயக்குனர் ஹலிதா ஷமீமுக்கு வாழ்த்துக் கூற நினைத்த சாய்பல்லவி இமெயிலில் வாழ்த்து கூறியுள்ளார். சாய் பல்லவி இமெயிலில், “ஹலோ ஹலிதா.. படத்தை பார்த்துவிட்டு நானும் என் பெற்றோரும் எமோஷனல் ஆகிவிட்டோம். இப்படி ஒரு எமோஷனலை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் இது போன்ற பல ரத்தினங்களை உருவாக்க வேண்டும். அன்பு மற்றும் பிரார்த்தனைகளுடன் சாய்பல்லவி” என்று அனுப்பியுள்ளார்.

இதனை ஹலிதா ஷமீம் ட்விட்டரில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டதோடு, “ஊரடங்கால் மன அழுத்தத்தில் இருந்தேன். தேவதையிடம் இருந்து கிடைத்த பாராட்டு” என்றும் பதிவிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...