அரசு செய்யாததை செய்த அக்ஷய்குமார்: 1500 பேருக்கு ரூ.3000 டெபாசிட்


203532c556e4c6db131acd02ebacb3ba

ஊரடங்கு காலத்தில் பசியும் பட்டினியுமாக உள்ள தொழிலாளர்களுக்கு 20 லட்சம் கோடி திட்டத்தை விட உடனடியாக அவர்களது வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன

ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவில்லை. தொடர்ச்சியாக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பதில்தான் அரசு மும்முரமாக உள்ளது.

இந்த நிலையில் நடிகர் அக்ஷய்குமார் 1500 சினிமா கலைஞர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் தலா 3 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 45 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

ஏற்கனவே பிரதமரின் கொரோனா தடுப்பு நிதியாக ரூ.25 கோடி அளித்த அக்ஷய்குமார், அதன் பின்னர் மும்பை மாநகராட்சியின் வளர்ச்சிக்கு ரூ.3 கோடியும், மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு ரூ.2 கோடியும் நிதி உதவி செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது மேலும் அவர் ரூபாய் 45 லட்ச ரூபாய் நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...