அமலாக்க துறை குறித்தும் அதன் அதிகாரங்கள் குறித்தும் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை என்றால் என்ன என்பது குறித்தும், அதன் அதிகார வரம்புகள் குறித்தும் விரிவாக இப்பொழுது பார்க்கலாம்.

இந்திய அரசு வகுத்துள்ள பொருளாதார சட்டத்தை அமல்படுத்துவதால் இந்த துறை அமலாக்கத்துறை என்று அழைக்கப்படுகிறது. அமலாக்க துறை அதாவது ECONOMIC ENFORCEMENT DIRECTORATE பொருளாதார குற்றங்களை கையாளும் ஒரு அமைப்பு ஆகும்.

இது நம் நாட்டில் நடக்கும் வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளை கண்காணிக்கிறது. மேலும் குற்றம் புரிந்தவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கிறது. அமலாக்க துறை பிரிவு 1956 ஆம் ஆண்டு மே மாதத்தில் உருவாக்க பெற்றது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 மற்றும் பண மோசடி பிரிவு சட்டம் 2002 ஆகிய இரண்டு நிதி சட்ட விதிகளை செயல் படுத்த அனுமதி அளித்ததும் இந்த அமைப்பு தான்.

பிறகு அமலாக்க பிரிவு அமலாக்க இயக்குநரகம் என பெயர் மாற்றப்பட்டது. இதன் தலைமையகம் டெல்லியில் அமைந்துள்ளது. அமலாக்க துறையில் முக்கிய பணி பொருளாதார சட்டத்தை அமல்படுத்துவது, பொருளாதார குற்றத்தை தடுப்பது ஆகும்.

நெக்ஸ்ட் தேர்வால் கிளம்பும் புது பிரச்சனை – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

1960 இல் நிர்வாக அதிகாரங்கள் பொருளாதார துறையில் இருந்து வருவாய்துறைக்கு மாற்றப்பட்டன. 1973 முதல் 1977 வரை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை நிர்வாக அதிகார வரம்பில் அமலாக்க இயக்குனரகம் இருந்தது .

அமலாக்க இயக்குனரகம் நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையின் கீழ் செயல்படுகிறது. அமலாக்க இயக்குனரகம் FAMA மற்றும் PMLA என்ற இரண்டு சட்டங்களை செயல் படுத்துகிறது.

FAMA என்பது சிவில் சட்டம். பணபரிவார்த்தை கட்டுப்பாடு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் சந்தேகத்திற்குரிய மீறல்களை விசாரிக்கவும், குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரங்களை கொண்டுள்ளது .

PMLA என்பது ஒரு குற்றவியல் சட்டம் ஆகும் . இதில் பணமோசடி செய்பவர்களை கைது செய்து வழக்கு தொடுப்பதை தவிர திட்டமிட்ட குற்ற செயல்களில் இருந்து பெறப்பட்ட சொத்துக்களை கண்டறிவும் , தற்காலிகமாக பறிமுதல் செய்வதற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தவும் அதிகாரம் உள்ளது.

இந்த அமைப்பு 2005 இல் நடைமுறைக்கு வந்த பிஎம்எல்ஏவின் கீழ் வரும் குற்றங்களை விசாரிக்கிறது. அதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம். மற்றும் பண மோசடியில் வழக்கில் சிக்கி இந்தியாவிலிருந்து தப்பி ஓடியவர்களின் வழக்குகளை அமலாக்க இயக்குனரகம் விசாரிக்கும் .

PMLA வின் சட்ட விதிகளின் படி பண மோசடி மற்றும் சொத்துக்களை மீட்டெடுப்பது தொடர்பான விவகாரங்களில் அமலாக்க இயக்குனரகம் பிற நாடுகளுடன் ஒத்துழைப்பை அணுகி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews