நேற்று முன் தினம் நடிகர் கமல்ஹாசன், ஒரு அன்பும் அறிவும் என்ற ஒரு பாடலை வெளியிட்டிருந்தார். இந்த பாடலுக்கு நல்லதொரு ரெஸ்பான்ஸ் இருந்தது.
இது போல பிரபலங்கள் மட்டுமின்றி தனி நபர்களும் ஸ்ம்யூல் போன்ற இணையதளங்களில் சொந்த வரிகளை எழுதி கொரோனா விழிப்புணர்வு பாடல்களை உருவாக்குகின்றனர்.
கொரோனா தமிழ்நாட்டுக்கு வந்த சமயத்திலேயே கொரோனா கொரோனா என்ன கொன்னுடாத வீணா என்ற பாடலை ஸ்ம்யூல் இணையதளத்தில் பாடி வைரலாகி இருந்தது.
இப்போது வீட்டில் குவாரண்டைனில் அடைபட்டு கிடக்கும் பலரும், சமையல், பாடல், டிக் டாக் , உடற்பயிற்சி என தங்களுக்கு தெரிந்த சகல வித்தைகளையும் இறக்குகின்றனர்.
தூய்மை பணியாளர்களுக்காக ஒரு பாடல், மருத்துவர்களுக்காக ஒரு பாடல், கொரோனாவை விரட்ட ஒரு பாடல் என இணையதளங்களையும் சமூக வலைதளங்களையும் கலக்கி வருகின்றனர்.