பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளுக்கு நாள் வசூலில் சாதனை படைத்து வருகிறது. 

கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மூன்றே நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

நான்காவது நாள் வசூலையும் சேர்த்து இந்த படம் 250 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் தொடர்ச்சியாக நவராத்திரி விடுமுறை நாட்கள் என்பதால் இந்த படத்திற்கு குடும்பம் குடும்பமாக ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது.

 இந்த வாரத்திற்குள் இந்த படத்தின் மொத்த வசூல் 500 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் இதுவரை வெளியான திரைப்படங்களில் கமல்ஹாசனின் ’விக்ரம்’ படம் 450 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இந்நிலையில் அந்த படத்தின் லைஃப்டைம் வசூலை ’பொன்னியின் செல்வன்’ 10 நாட்களில் முறியடித்துவிடும் என்று எதிர்பாரக்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் வசூல் வேறு எந்த படத்தாலும் முறியடிக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய வசூலை எட்டும் என டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.