வாழைப்பழம் தேங்காய் இறைவனுக்கு படைப்பது ஏன்

c0c11c15f3d94027bc5ca0dfde2c3148

கோவிலுக்கு சென்றாலே கோவில் வெளியே கடை வைத்திருப்பவர்கள் சார் சாமிக்கு தேங்காய் பழம் வாங்கிக்கோங்க என்று நம்மை வாங்காமல் விட மாட்டார்கள் எதற்காக ஸ்வாமிக்கு தேங்காய் பழம் படைக்கிறோம் என்பதை பற்றிய பதிவே இது

எந்தப் பழமாக இருப்பினும்சாப்பிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.

இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுவதாக அமைகிறது  இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!
என வேண்டவே…. நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.

 தேங்காய்க்கும் அதுபோலவே குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.

ஆனால்,
தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.
பழம் கொட்டை என்பது கிடையாது.
அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள் என்பதே உண்மை. இதை நாமும் தவறாமல் கடைபிடிக்கிறோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews