பாலியல் பலாத்காரம் என்பது உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தண்டனைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பாலியல் குற்றங்கள் குறைந்தது போல் இல்லை என்பதும் ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது.
இந்த நிலையில் சிலர் சைக்கோ பாலியல் பலாத்கார குற்றவாளிகள் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து பாலுறவு கொள்ளும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுமி சமீபத்தில் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அவரது உடல் குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மறுநாள் அந்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டு சிதிலமடைந்து கிடந்ததை பார்த்து அந்த பகுதி மக்கள் குடும்பத்தினருக்கும் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த போது கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து உடலுறவு கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர்.
ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்த சைக்கோ குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வழக்கில் சந்தேகத்துக்கு இடமான ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவரிடம் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
12 வயது மகள் இறந்த துக்கம் தாங்காமல் அவரது பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் அவரது பிணத்தை தோண்டி எடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள கொடூரத்தை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். இது போன்ற குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.