மந்திரத்துக்கு எப்போது உயிர் உண்டாகும்

e82d54431f93d5a194101055d4ffa0ec

பொதுவாக பல பிரச்சினைகளுக்கும் பலவித துன்பங்களுக்கும் ஆன்றோர்களாலும் சான்றோர்களாலும் நமக்கு வழங்கப்படும் அட்வைஸ் இந்த மந்திரத்தை ஜெபித்து வா அந்த மந்திரத்தை ஜெபித்து வா என்பதே. மந்திரங்களை ஜெபித்த உடன் உடனே பலன் யாருக்கும் வந்துவிடுவதில்லை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மந்திர ஜபத்தின் பவர் நம்மை வந்தடையும்.

நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஒரு முறை ஒரு மந்திரத்தை ஜபித்தால்,1000 முறை ஜபித்ததற்கான பலன்கள் கிடைக்கும்;

மலை மேலே இருக்கும் ஒரு கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,1,00,00,000 தடவை ஜபித்தபலன்கள் நம்மை வந்து சேரும்;

கடலோரக்கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,2,00,00,000 தடவை ஜபித்ததற்குரிய மந்திர ஜபசக்தி நமக்கு உருவாகும்;

இந்த எண்ணிக்கை சாதாரண நாட்களில்,ஜபித்தால் கிடைக்கும் எண்ணிக்கை ஆகும்.

இதே மந்திரஜபத்தை தமிழ் வருடப்பிறப்பு,தமிழ்மாதப்பிறப்பு,அமாவாசை,பவுர்ணமி,கிரகண நாட்களில் ஜபித்தால்,மேலே கூறிய எண்ணிக்கையோடு 100 கோடி மடங்கு பலன்களாக நம்மை வந்து சேரும்.

எந்த ஒரு மந்திரத்தையும் நாம் 1,00,000 தடவை ஜபித்தபின்னரே,அந்த மந்திரத்துக்கு உயிர் உண்டாகி,நம்மை பாதுகாக்கத் துவங்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews