பூஜை செய்து மணி அடிக்கும்போது என்ன மந்திரம் சொல்ல வேண்டும்

bb1134fe0102544aaea363358458b806

இறைவனுக்கு பூஜை செய்து மணி அடிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம். இதை கோவில்களில் மணி அடித்து பூஜை செய்யும்போதும் சொல்லலாம். வீட்டில் பூஜை செய்யும்போதும் சொல்லலாம்.

“ஆக மார்தம்து தேவானாம் கமநார்தம் து ரக்ஷஸாம்
குர்வே கண்டா ரவம் தத்ர தேவதா ஆஹ்வான லாஞ்சனம்”

என்னும் மந்திரத்தை சொல்ல வேண்டும். சமஸ்கிருதம் தெரியாதவர்கள், “தேவர்களை வரவேற்பதற்காகவும், பூஜை செய்யுமிடத்தில் இருக்கும் கண்களுக்குப் புலப்படாத தீய அல்லது அசுர சக்திகளை விலக்குவதற்காகவும் இந்த மணியோசையை எழுப்புகிறேன்,” என்று சொல்ல வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews