அரியனையில் ஏறிய முதல் வாரத்திற்குள் ராஜினாமா செய்த பிரதமர்..பின்னணி என்ன?

தென் அமெரிக்க நாடான பெருவின் பிரதமராக ஹெக்டர் வலர் பின்டோ (வயது 63). இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஹெக்டட் வலர் பின்கோ குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் புகார் அளித்துள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் ஊடகங்களின் வெளியிட்ட இந்த செய்தியை அவர் மறுத்திவிட்டார். இந்த நிலையில் சில ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் தன்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்பதை ஹெக்டட் வலர் நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு அதிபர் பெட்ரோ காஷ்டிலோ தெரிவித்தார்.  பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஹெக்டட் வலர் பின்கோ தெரிவித்த நிலையில் தனது ராஜினாமா கடித்தை அந்நாட்டு அதிபருடன் அளித்துள்ளார்.

மேலும் தன் மீது குற்றம் சாட்டியவர்கள் மீது வழக்குத் தொடர இருப்பதாகவும் அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் பெரு நாட்டின் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment