செல்வச் செழிப்புடன் மனநிம்மதியும் வேண்டுமா…? திருவண்ணாமலை சென்று அஷ்டலிங்கத்தை வழிபடுங்க…!

திருவண்ணாமலையில் கிரிவலம் ரொம்பவே விசேஷமானது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா உள்பட பல விஐபிகளும் இங்கு கிரிவலம் வந்துள்ளனர். சக்தி வாய்ந்த பிரசித்தி பெற்ற இந்தத் தலத்தில் ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமியின் போதும் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்து கிரிவலம் வரும்.

Ashta lingam
Ashta lingam

அப்படி வரும் வழியில் அஷ்ட லிங்கத்தை அனைவருமே கண்டிப்பாக பார்த்து விட்டுத் தான் வருவர். அவற்றைப் பற்றியும் அவற்றை வழிபடுவதன் பலன்கள் பற்றியும் இப்போது பார்க்கலாம்.

இந்திரலிங்கம்

முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

அக்னிலிங்கம்

Agni Lingam
Agni Lingam

இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது.

எமலிங்கம்

மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ளது எமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது எமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம். இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.

நிருதி லிங்கம்

நான்காவதாக உள்ளது நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்கு. இதனுடைய கிரகம் இராகுவாகும். இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்சனைகளின்றி வாழலாம்.

வருண லிங்கம்

ஐந்தாவதாக உள்ளது வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மழை தரும் வருண தேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

வாயு லிங்கம்

ஆறாவதாக உள்ளது வாயு லிங்கம். இது வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை வழிபட்டு வந்தால் இருதயம், வயிறு, நுரையிரல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்துகொள்ளலாம்.

குபேர லிங்கம்

Kubera lingam
Kubera lingam

ஏழாவது வருவது குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஈசானிய லிங்கம்

கடைசியாக 8வதாக வருவது ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் ஈசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை வழிபட்டால் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.