சுவையான மசால் வடைக் குழம்பு செய்வோமா?

தேவையானவை: மசாலா வடை – 6

தேவையானவை: வெங்காயம் – 2

தேவையானவை: தக்காளி- 2

தேவையானவை: பச்சை மிளகாய் – 3

தேவையானவை: தேங்காய் – ½ மூடி

தேவையானவை: சோம்பு –1/2 ஸ்பூன்

தேவையானவை: முந்திரி – 5

தேவையானவை: இஞ்சி – 1 துண்டு

தேவையானவை: தனியா தூள் – 2 ஸ்பூன்

தேவையானவை: மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்

தேவையானவை: மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

தேவையானவை: கிராம்பு – 2

தேவையானவை: மிளகு –1/4 ஸ்பூன்

தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு

தேவையானவை: கறிவேப்பிலை – தேவையான அளவு

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

செய்முறை : 1. வெங்காயம், தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை: 2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, இஞ்சி மற்றும் முந்திரி சேர்த்து வறுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை : 3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கிராம்பு, மிளகு சேர்த்து தாளிக்கவும்.

செய்முறை : 4. அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மிளகாய்த் தூள், தனியாத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

செய்முறை : 5. அடுத்து அரைத்த தேங்காய் கலவை, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

செய்முறை: 6. அடுத்து குழம்பு கொதிக்கும்போது வடைகளைப் போட்டு எடுத்தால் மசால் வடை குழம்பு ரெடி.