சுவையான பர்மா வாழைத்தண்டு சூப்!!

தேவையானவை: வாழைத் தண்டு – 1

தேவையானவை: பாசிப்பருப்பு – 1 கப்

தேவையானவை: பச்சை மிளகாய் – 3

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 3

தேவையானவை: தக்காளி – 1

தேவையானவை: சின்ன வெங்காயம் – 10

தேவையானவை: இஞ்சி – 1 துண்டு

தேவையானவை: பூண்டு – 1

தேவையானவை: சீரகம் – 1 ஸ்பூன்

தேவையானவை: மஞ்சள் தூள் –1/2 ஸ்பூன்

தேவையானவை: கடுகு – ¼ ஸ்பூன்

தேவையானவை: உளுந்து – ¼ ஸ்பூன்

தேவையானவை: தேங்காய் – அரை மூடி

தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: கறிவேப்பிலை – தேவையான அளவு

தேவையானவை: கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை: 1.   வாழைத்தண்டில் உள்ள நாரினை நீக்கி, சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டினை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

செய்முறை: 2.   அடுத்து வாணலியில் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், சீரகம், எண்ணெய் சேர்த்து வேகவிடவும்.

செய்முறை: 3.   அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வாழைத்தண்டு, உப்பு சேர்த்து வேகவிட்டு தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும்.

செய்முறை: 4.   அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேகவிட்ட கலவையில் ஊற்றி, கொத்தமல்லி தூவி இறக்கினால் பர்மா ஸ்டைல் வாழைத் தண்டு சூப் ரெடி.