இட்லி, தோசைக்கு வாழைப்பூ வைத்து புதுவிதமான துவையல்!

தேவையான பொருட்கள்: வாழைப்பூ – 1

தேவையான பொருட்கள்: கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய் – 4

தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் – கால் கப்

தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: புளி – எலுமிச்சை அளவு

தேவையான பொருட்கள்: எண்ணெய் – 3 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: கடுகு – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை – சிறிதளவு

தேவையான பொருட்கள்: உப்பு – சுவைக்கு ஏற்ப

தேவையான பொருட்கள்: பெருங்காயத்தூள் – சிறிதளவு

செய்முறை: முதலில் வாழைப்பூவில் உள்ள தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து மோரில் போட்டு வைக்கவும், அப்போது தான் சமைக்கும் வரை வாழைப்பூ கருகாமல் இருக்கும்.

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து ஒன்றாக வதக்கவும். அடுத்து அதை மற்றோரு பாத்திரத்தில் மாற்றி ஆற வைக்கவும்.

செய்முறை: பின்பு ஒரு வாணிலியில் வாழைப்பூவை தனியாக வதக்க வேண்டும். முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பை தேங்காயை அரைத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை: அடுத்து கடைசியாக வாழைப்பூ, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து அரைக்கவும் ,பின்பு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் கொட்டி கலந்து விடவும். இப்போது சுவையான வாழைப்பூ துவையல் தயார்.