பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் இறுதிப்போட்டியில் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
ஆரி டைட்டிலை வின் செய்ய பாலாஜிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. பிக்பாஸ் முடிந்து வெளியில் வந்த அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ட்விட்டர், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாலாஜி முருகதாஸ் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவருக்கு, ”நீங்கள் விரைவில் என்னை பெரிய திரையில் பார்க்கலாம்,” என பதிலளித்து இருக்கிறார். இதனால் அதுகுறித்த அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.