அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்திற்கு எச்சரிக்கை!!! ‘மிக கனமழை’க்கு வாய்ப்பு;
தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் மார்ச் 9ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, செங்கல்பட்டு ஆகிய 15 மாவட்டங்களில் மார்ச் 7ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மார்ச் 8ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
