ஒமைக்ரான் பரவலின் எதிரொலி: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த வார்ரூம் திறப்பு!

கொரோனா வைரஸை விட அதிக அளவு வீரியம் மிக்கதாக பரவுகிறது ஒமைக்ரான். இவை இந்தியாவிலும் அதிக அளவு வீரியம் உள்ளதாக வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 12 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளன

ஒமைக்கிரான்

குறிப்பாக நேற்றைய தினம் தமிழகத்தில் திடீரென்று ஒமைக்ரான் பரவல் உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒன்றாக வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுபடுத்த சென்னையில் வார் ரூம் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் கோவிட் வார் ரூம் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக வார் ரூம் தொடங்க மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கையில் தீவிரம் செலுத்தி வருகின்றனர். மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கை, ஆக்சிசன் கையிருப்பு குறித்த தகவல்களை உடனுக்குடன் அறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment