Entertainment
கணக்காளர் ரம்யா குறித்து விஷால் பிலிம் பேக்டரி முக்கிய அறிக்கை!

விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கணக்காளராக ரம்யா என்பவர் பணிபுரிந்து வந்தார் என்பதும் அவர் சுமார் 45 லட்ச ரூபாய் வரை முறைகேடாக பணத்தை ஏமாற்றி உள்ளதாகவும் சமீபத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இது குறித்து காவல் நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகர் விஷால் பிலிம் பேக்டரி தற்போது இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எங்கள் “விஷால் ஃபிலிம் பேக்டரி” நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்த திருமதி ரம்யா அவர்கள் நிறுவனத்தில் பல வருடமாக வங்கிக் கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி ரூ. 45,00,000 வரை ஏமாற்றியுள்ளார் என்பதை கண்டறியப்பட்டு 30.6.2020
வின்று காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7.7.2020 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.
எனவே திருமதி ரம்யா இனி எங்கள் நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணியாற்றவில்லை என்று தெரிவித்துக்கொள்கிறோம். “விஷால் ஃபிலிம் ஃபேக்டரி” நிறுவனத்தின் கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் திருமதி ரம்யா அவர்களை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறுது. மேலும் மீறி தொடர்பு வைத்துக் கொண்டால் நீர்வாகம் பொறுப்பல்ல என்பதை இதன்
மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

