கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’ இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
முதல்கட்ட படப்பிடிப்பில் கமலஹாசன் மற்றும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் தற்போது கமல்ஹாசன் மற்றும் பகத் பாசில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
இந்த படத்தில் கமல்ஹாசன் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாகவும், விஜய்சேதுபதி ஆக்ரோஷமான வில்லனாகவும் பகத் பாசில் விஞ்ஞானியாகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அவர்களுடைய பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்கள் மட்டுமே தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமை ரூபாய் 37 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கோல்டுமைன் என்ற நிறுவனம் இந்த தொகையை கொடுத்து இந்தி டப்பிங் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தை கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது