Sports
தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் வீசிய சாதனை பந்துவீச்சாளர் மரணம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான பாபு நட்கர்னி நேற்று மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர்.
41 டெஸ்டுகளில் விளையாடிய அவர் 88 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி 1,414 ரன்கள் எடுத்ததால் ஆல் ரவுண்டராகவும் போற்றப்படுகிறார்.
இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பாபு நட்கர்னி கடந்த 1964-ம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஒன்றில் 21 மெய்டன் ஓவர்களை தொடர்ச்சியாக வீசி சாதனை செய்துள்ளார். அந்த இன்னிங்சில் அவர் 32 ஓவர்கள் பந்து வீசி வெறும் 5 ரன் மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
